ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இந்த ஆளுக்கு வேற வேலையே இல்லையா என்று புலம்பும் அளவுக்கு பல சர்ச்சைகளில் சிக்கி சிப்ஸாக பொறித்துவிட்டார்கள் இயக்குநர் ராம் கோபால் வார்மாவை, தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையை வேண்டுமென்றே கிளப்பியதுபோல் தெரிகிறது இவர் செய்த வேலை.நேற்று உலக கோப்பை கிரிக்கெட்டின் அரை இறுதி ஆட்டம் நடைபெற்றது இதில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதின, பரபரப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் இந்தியா தோற்றது, இந்தியா தோற்றது கூட இப்ப பிரச்சனையில்லை ராம் கோபால் வர்மா அவரது ட்விட்டரில் எழுதியது தான் தற்போது தீயாக பற்றிக் கொண்டிருக்கிறது. “கிரிக்கெட் அரையிறுதியில் இந்தியா தோற்றது எனக்கு மிகவும் மகிச்சியை தந்துள்ளது, ஏனென்றால் எனக்கு கிரிக்கெட் சுத்தமாக பிடிக்காது, அந்த 11 பேர் ஆடுவதை பார்க்க பல லட்சம் பேர் வேலைக்கு லீவ் போட்டு இப்படி முட்டாள்தனமாக நடந்து கொள்வது எனக்கு பிடிக்கவில்லை, ஒருவழியாக நேற்று இந்தியா தோற்றுவிட்டது இனி மக்கள் அவரவர் வேலையை பார்க்க சென்றுவிடுவார்கள். இப்படி ஒரு கொடூரமான நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் என் நாட்டு மக்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும். மேலும் இனிமேல் இந்தியா ஆடும் அனைத்து ஆட்டங்களிலும் எதிரணியிடம் தோற்றுக் கொண்டே இருக்க வேண்டும். சிகரெட், குடிப்பழக்கம் இரண்டும் உடலை மட்டுமே நாசம் செய்யும், ஆனால் கிரிக்கெட் ஒட்டுமொத்த என் தேசத்தையே நாசம் செய்து கொண்டிருக்கிறது.” என்று ட்விட்டரில் ராம் கோபால் வர்மா கூறியுள்ளார்.