ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தென்னிந்திய சினிமாவை ஒரு கலக்கு கலக்கி, பாலிவுட்டிலும் முத்திரை பதித்தவர் நடிகை ஸ்ரீதேவி. பிரபல இந்தி தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டிலானார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ''இங்கிலீஷ் விங்கிலீஷ்'' என்ற படத்தில் நடித்தார். அப்படம் சூப்பர் ஹிட்டாக அமைந்தது. இதனையடுத்து இப்போது மீண்டும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தில் ஸ்ரீதேவி, வளர்ப்பு தாயாக நடிக்கிறார். வளர்ப்பு தாய்க்கும், வளர்ப்பு மகளுக்கும் இடையே நடக்கும் பாசப்போராட்டம் தான் படத்தின் கதை. இப்படத்திற்கு இன்னும் தலைப்பு முடிவாகவில்லை, அடுத்தாண்டு படப்பிடிப்பு துவங்குகிறது. ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார்.
இப்படம் குறித்து போனி கபூர் கூறுகையில், இப்படத்தின் கதை ஒரு பெண்ணுக்கும், அவளது 18வயது வளர்ப்பு மகளுக்கும் இடையே நடக்கிற கதை. ஸ்ரீதேவி மகளாக புதுமுகம் ஒருவரை நடிக்க வைக்க எண்ணியுள்ளோம். இதுபோன்ற கதையில் ஸ்ரீதேவி நடிக்க வேண்டும் என்று ரொம்பநாளாக ஆசைப்பட்டேன். ஆனால் அதற்கான நேரம் இப்போது தான் வந்துள்ளது. எந்த கேரக்டர் கொடுத்தாலும் அவர் அதை சரியாக செய்வார் என்று கூறியுள்ளார்.