விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
தற்போது திவர் படத்தின் ப்ரீபுரோடெக்ஷன் பணிகளில் மும்முரமாக இருந்து வரும் அர்ஜூன் கபூர் தனியார் வங்கி ஒன்றில் ரூ.40 லட்சம் கடன் வாங்கி உள்ளாராம். அர்ஜூன் கபூரும், அவரது தாய்வழிப் பாட்டியான ஷட்டி சேரியும் இணைந்து இந்த கடனை வாங்குவதற்காக விண்ணப்பித்துள்ளார்களாம். இதற்காக அவர்கள் இருவரும் வங்கிக்கு நேரில் சென்று கடனுக்கான விண்ணப்பத்தையும் மற்ற பேப்பர்களையும் ஒப்படைத்ததாகவும், கடன் தொகை விரைவில் அப்ரூவல் ஆகும் எனவும் கூறப்படுகிறது.
அர்ஜூன் கபூர் விரைவில் தொழில் ஒன்றை தொடங்க உள்ளதாகவும், இதற்காக தனது சொத்துக்களை வைத்து இதில் முதலீடு செய்வதற்காக வங்கியில் கடன் பெற விண்ணப்பித்துள்ளாராம். இருப்பினும் கடன் வாங்குவதற்கான காரணத்தை வெளியிட அர்ஜூன் மறுத்து விட்டாராம். இது குறித்து அர்ஜூனின் உதவியாளர் கூறுகையில், இந்தியாவில் எல்லோரும் தான் வங்கியில் கடன் வாங்குகிறார்கள். அதில் அர்ஜூனின் குடும்ப உறுப்பினர்கள் மட்டும் விதிவிலக்கல்ல என தெரிவித்துள்ளார்.