அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா |
மர்தாணி படத்தில் நடித்ததன் மூலம் ஒட்டுமொத்த பாலிவுட்டின் பார்வையையும் தன் பக்கம் திரும்ப செய்திருக்கும் நடிகை ராணி முகர்ஜி, சமீபத்தில் தனது குழந்தை பெற்றுக் கொள்ளும் ஆசையை வெளிப்படுத்தினார். இதற்கு கரீனா கபூர்-சைஃப் அலிகான் தம்பதி வாழ்த்து தெரிவித்ததுடன் ராணி நிச்சயம் ஒரு நல்ல தாயாக இருப்பார் எனவும் கருத்து தெரிவித்துள்ளது.
ராணி முகர்ஜிக்கு வாழ்த்து தெரிவித்திருக்கும் அதே வேளையில், தனக்கு இப்போதைக்கு குழந்தை பெற்றுக் கொள்ளும் எண்ணம் ஏதும் இல்லை என தெரிவித்துள்ளார். மேலும் குறைந்தது 2 வருடங்கள் கழித்தே அதை பற்றி யோசிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார் 33 வயதாகும் கரீனா கபூர். இது தொடர்பாக சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், குழந்தை பெற்றுக் கொள்வதற்காக பயப்படவில்லை. அது ஒரு இனிமையான அனுபவம்.
இருப்பினும் சரியான நேரம் வருவதற்காகவே காத்திருக்கிறேன். தற்போது நாட்டில் குழந்தைகளின் கல்வி மற்றும் குழந்தைகளின் உரிமை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் பிசியாக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார். இருப்பினும் திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகியும் தங்களுக்கு குழந்தை இல்லை என்ற கவலை வரும் போதெல்லாம், இருவரும் கரிஷ்மாவின் குழந்தைகளுடன் தங்களின் நேரத்தை செலவிடுகிறார்களாம்.
கரிஷ்மாவின் குழந்தைகளான சமீரா மற்றும் கியான் ராஜ், சைப் அலிகானின் குழந்தைகளான இப்ராஹிம் மற்றும் சாராவுடனேயே விளையாடுகிறார்களாம். தனது சகோதரி கரிஷ்மாவும், தாங்களும் ஒரே குடும்பமாக இருப்பதால் அவர்களுடனேயே அதிக நேரத்தை செலவிடுவதாக கூறும் கரீனா, வெளியில் சென்றிருந்தாலும் சார்பிடுவதற்கு வீட்டிற்கு வந்து அவர்களுடனேயே சாப்பிடுகிறாராம்.