அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு |
பாலிவுட் நடிகை ராணி முகர்ஜி நடித்து வெளிவந்துள்ள படம், மர்தானி. இந்த படத்தில் பெண் குழந்தை கடத்தலை தடுக்கும் அதிரடி பெண் போலீஸ் அதிகாரியாக ராணி முகர்ஜி நடித்துள்ளார்.
குழந்தை கடத்தலுக்கு எதிராக போலீசார் போராடுவதற்கு இந்த படம் ஒரு உந்து சக்தியாக அமைய வேண்டும் என்பதற்காக இந்த படத்தை அனைத்து போலீசாருக்கும் போட்டுக்காட்ட பீகாரின் போலீஸ் உயர் அதிகாரிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் காமன்வெல்த் மனித உரிமை கழகங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக பீகார் சி.ஐ.டி., அதிகாரிக்கு அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், மர்தானி படத்தின் நாயகி ஷிவானி ஒரு போலீசுக்கு உரிய அனைத்து தகுதிகளுடனும், நேர்மையானவராக இருப்பதால் இது போலீசார் அனைவருக்கும் முன்உதாரணமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதே சமயம், அவரது செயல்பாடுகள் வன்முறை உணர்வை தூண்டும் விதமாக உள்ளதால், அது பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். குற்றவாளிகளுக்கு எதிராக வன்முறை போக்கை கடைபிடிக்க வேண்டும் என்ற உணர்வையும், திறமை என்ற பெயரில் என்கவுண்டரை ஊக்குவிக்கும் விதமாகவும் இந்த படம் உள்ளது.
குற்றவாளிகளை சட்ட ரீதியாக தண்டிக்க வேண்டிய பொறுப்பு போலீசுக்கு உண்டு. மர்தானி படத்தில் போலீசாரை முரடர்கள் போன்று காட்டி இருப்பதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இந்த படம் பற்றி நன்கு ஆய்வு செய்த பிறகே போலீசாருக்கு இதனை போட்டுக் காட்டுவது குறித்து முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.