ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட்டின் முன்னணி நடிகரான அமீர் கான், தற்போது பி.கே. படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சினிமாவில் பிஸியாக இருந்த அமீர்கான், டி.வி. ரியாலிட்டி ஷோவான சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். மக்கள் பிரச்னையை மையப்படுத்தி இந்த நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகிறது. மக்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்தநிகழ்ச்சி தற்போது மூன்றாவது சீசனை தொட்டுள்ளது. தற்போது இந்த நிகழ்ச்சிக்கான வேலைகளில் பிஸியாக இருக்கிறார் அமீர்கான்.
இந்நிலையில், சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பாலிவுட் பிரபலங்களை அழைத்து வந்து பேச வைக்க எண்ணியுள்ளார் அமீர்கான். பிரபல பாலிவுட் பிரபலங்களான தீபிகா படுகோனே, கங்கனா ரணாவத், ப்ரனீதி சோப்ரா ஆகியோர் பங்கேற்று இந்த நிகழ்ச்சியில் பேச உள்ளனர். பெண்களுக்கான அதிகாரம் தொடர்பாக இவர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்ய இருக்கின்றனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் பாலிவுட்டின் டாப் ஸ்டார்களை அழைத்து பேச வைக்க எண்ணியுள்ளனர். அப்படி பங்கேற்கும் பிரபலங்கள் தங்களது சினிமா பற்றி எதுவும் பேசமாட்டார்கள், முழுக்க முழுக்க சமூகம் தொடர்பான பிரச்னைகளை பற்றி பேசுவார்கள் என கூறப்படுகிறது. சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியின் மூன்றாவது தொகுப்பு அடுத்த மாதம் முதல் ஒளிப்பரப்பாகிறது.