ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர் சமூக வலைத்தளத்தில் சுறுசுறுப்பாக இயங்குகிறவர். கங்கனா ரணவத் போன்று பரபரப்பான கருத்துகளை வெளியிடுகிறவர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு "தீவிரவாதிகளின் அட்டகாசம் ஆப்கானிஸ்தானில் பொறுத்துக்கொள்ள முடியாத அளவில் இருப்பதுபோலத்தான், இங்கேயும் இந்தியாவில் இந்துத்துவ தீவிரவாதமும் சகித்துக் கொள்ள முடியாத அளவுக்கு இருக்கிறது"என்று தெரிவித்திருந்தார் . இந்த கருத்து கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதேபோல போதை வழக்கில் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டபோது அவருக்கு ஆதரவாக முதல் குரல் கொடுத்தவரும் இவர்தான். ஆர்யன்கான் நிரபராதி அவருக்கு எதிராக சதிவலை பின்னப்படுகிறது என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஸ்வரா பாஸ்கர் திடீரென மும்பை வெர்சோவா காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் தனக்கு கொலை மிரட்டல் கடிதம் ஒன்று வந்துள்ளதாக புகார் அளித்துள்ளார். அந்த கடிதத்தையும் போலீசில் ஒப்படைத்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.