ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ் சினிமாவில் தங்களுக்கென தனி பாதையை உருவாக்கிக் கொள்ள நினைப்பவர்கள் ஓரளவிற்கு முன்னேறிவிடுவார்கள். ஆனால், அடுத்தவர்களைப் பார்த்து பொறாமைப்பட்டு அவர்களைப் போலவே தாங்களும் வளர வேண்டும் என்று நினைப்பவர்கள் தடுமாறித் தேங்கிவிடுவார்கள்.
ஆனந்தமாய் திரையுலக வாழ்க்கையை ஆரம்பித்தாலும் அகலக் கால் வைத்ததால் மிகப் பெரும் கடனாளியாகி, தன் சொந்த அலுவலகத்தைக் கூடப் பறிகொடுத்தவர் அந்த சாமி இயக்குனர். அவருக்கும் சங்கத் தலைவர் நடிகருக்கும் சண்டை முடிந்து ஒரு வழியாக இரண்டாவது கோழி படத்தை முடித்துவிட்டார்கள்.
வர உள்ள படங்களில் இந்தப் படமும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது நிஜம். படத்தின் வெளியீட்டுத் தேதியையும் குறித்துவிட்டார்கள். ஆனாலும், படம் திட்டமிட்டபடி வருமா என்பது சங்கத் தலைவருக்கும் மேல் உள்ள பஞ்சாயத்து ஆட்களிடம்தான் உள்ளதாம். சாமி இயக்குனர் அவருடைய முந்தைய பல கோடி பாக்கிப் பணத்தை செட்டில் செய்தால் மட்டுமே இரண்டாவது கோழி சரியான சமயத்தில் வரும் என்கிறார்கள்.
சங்கத் தலைவரா, பஞ்சாயத்து ஆட்களா என்ற பஞ்சாயத்து விரைவில் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.