ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
டிமான்ட்டி காலனி. இளம் கூட்டணியில் உருவாகிய படம். அதில் பலரின் கவனத்தை ஈர்த்தது... திகில் தருணங்களில் அசராமல் அசத்தி இருக்கும், அரவிந்தின் ஒளிப்பதிவு! 27 வயது இளைஞன்; ஐந்து ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவின் வசம் இருப்பவர்; இரண்டு ஆண்டுகளாக சந்தோஷ் சிவனின் நிழலில் வளர்ந்தவர். அந்த அனுபவத்துடன், தன் முதல் படத்திற்கு பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார்.
'நான் தொல்லியல் ஆராய்ச்சியாளர் ஆகணும்னு ஆசைப்பட்டவன். இப்போ 'சினிமா பக்கம்' வந்துட்டேன்!' பேச ஆரம்பிக்கிறார், அரவிந்த்!
சினிமாவுக்கு அரவிந்த் நுழைந்தது?
என் சொந்த ஊர் வேலூர். படிச்சது, சென்னையில இருக்கிற லதா ரஜினிகாந்தோட ஆஸ்ரம் பள்ளியில்! அங்கேதான் எனக்கு சினிமா ஆர்வம் வந்தது. அதே ஆர்வத்துல, விஷுவல் கம்யூனிகேஷனும்; மும்பையில இருக்கிற ஒரு பிலிம் இன்ஸ்டிடியூட்ல போஸ்ட்-புரொடக் ஷனும் படிச்சேன். 2010ல, சந்தோஷ் சிவன் சார்கிட்டே அசிஸ்டென்டா சேர்ந்துட்டேன்.
போஸ்ட்-புரொடக்ஷன் படிச்சிட்டு எப்படி ஒளிப்பதிவு?
எனக்கு சின்ன வயசுல இருந்தே ஓவியங்கள் மேல ஈடுபாடு அதிகம். அதே மாதிரி, ஒரு விஷயத்தை எப்படி கிரியேட்டிவா காட்டுறதுன்னு ரொம்ப யோசிப்பேன். அந்த முனைப்பு, ஒளிப்பதிவு பக்கம் என் கவனத்தை திருப்பிடுச்சு.
இயக்குனர் அஜய் ஞானமுத்துவும், நீங்களும்...
'துப்பாக்கி' படத்துல, ஏ.ஆர்.முருகதாஸ் சாரோட உதவி இயக்குனர் அஜய் ஞானமுத்து. சந்தோஷ் சிவன் சாருக்கு உதவி ஒளிப்பதிவாளர் நான். அப்போ, நண்பர்கள் ஆனோம்! படப்பிடிப்புல அஜய் ரொம்ப, 'துறு துறு'ன்னு இருப்பான். நான் சோர்ந்து போகும்போதெல்லாம், எனக்கு 'எனர்ஜி' கொடுக்கிறது அவன் தான்!
உங்கள் பார்வையில் ஒளிப்பதிவு...
ஒரு திரைக்கதைக்கு உயிர் கொடுக்கிறதே ஒளிப்பதிவு தான். அது, கதையை விட்டு விலகாம இருக்கணும். படத்துல ஒளிப்பதிவு மட்டும் தனியா தெரிஞ்சா, அந்த படம் தோல்வின்னு அர்த்தம்!
'டிமான்ட்டி காலனி' படத்தில், ஒரே அறையில் ஒளிப்பதிவு செய்த அனுபவம்?
மொத்தம், 36 நாள் ஷூட்டிங். சென்னை பின்னி மில்லுல செட் போட்டு எடுத்தோம். பெரும்பாலும், இருட்டிலேயே, 'ஷூட்' பண்ணினோம். இதுல ரொம்ப முக்கியமான விஷயம், லைட்டிங். கரன்ட் இல்லாம இருக்கிற ஒரு அறை. அதுல, சோடியம் லைட், மெழுகுவர்த்தி, 'லைட்ஹவுஸ்' வெளிச்சம்னு தத்ரூபமாக காட்ட முயற்சி பண்ணினேன். 'ப்ரேமிங்'ல ரொம்ப கவனமா இருந்தேன். குறிப்பா, 'ஒஜா போர்டு' பயன்படுத்தியிருக்கிற காட்சி, மெழுகுவர்த்தி வெளிச்சதுல மட்டுமே எடுத்தது. திகில் உணர்வை ஏற்படுத்த, இப்படி ஒளிப்பதிவு பண்ணியிருந்தேன்.
இந்த படத்துல பயன்படுத்தியிருக்கும் நிறங்கள் பற்றி...
முதல் பாதியில் ஒரு, 'ப்ளாஷ்பேக்' வரும். அதை கறுப்பு - வெள்ளையில காமிக்காம, 'பளிச்' நிறங்களை வைச்சி ரொம்ப வண்ணமயமா காட்டியிருப்போம். ஏன்னா, படத்துல இன்னொரு பாதி ஒரே அறைக்குள்ளே நடக்குது. அதுல வண்ணங்களை சேர்க்க முடியாது. 'ப்ளாஷ்பேக்' கலர்புல்லாவும், அறைக்குள்ளே நடக்குற காட்சிகள் நீல நிறத்துலேயும், 'க்ளைமாக்ஸ்' காட்சிகள் ஆரஞ்சு நிறத்துலேயும் இருக்கற மாதிரி பார்த்துக்கிட்டோம். இந்த வெரைட்டி, படம் பார்க்கும் ரசிகனை, சோர்வாக்காம இருக்கும்னு நினைச்சோம்.
சரி... நிஜமான டிமான்ட்டி காலனிக்குப் போய் இருக்கீங்களா?
அய்யய்யோ... அந்த பக்கம் கூட போனதில்லை!