குப்பி படம் மூலம் பிரபலமான ஏ.எம்.ஆர்.ரமேஷ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் புதிய படம் காவலர் குடியிருப்பு. வஷிஸ்டா பிலிம்ஸ் இந்துமதி சார்பில் இந்துமதி தயாரித்திருக்கும் இப்படத்தில் அனீஸ்தேஜஸ்வர் நாயகனாகவும் ஸ்ருதி நாயகியாகவும் அறிமுக மாகின்றனர். சரண்யா, திலிப்ராஜ், அவினாஷ் ஆகியோரும் நடித்துள்ளனர்.
பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது பெங்களூரில் நடந்த கலவரத்தில் இரு இளம் உள்ளங்கள் இணைந்தன. அந்த உள்ளங்கள் காலவெள்ளத்தில் எப்படியெல்லாம் இழுத்து செல்லப்பட்டன என்பதே கதை. இணைந்த இருவரும் காவலர் குடியிருப்பில் எதிரெதிர் வீட்டின் வசித்தவர்கள். சாதி, மதம் பொருளாதார ஏற்ற தாழ்வுகளை தாண்டி அவர்கள் மனங்கள் சேர்ந்தன. காதல், தியாகம், தாய் பாசம், நன்றி கடனுக்கு தன் வாழ்வை அர்த்த மாக்கிவிட்டு போன ஒரு தமிழ் இளைஞனின் செல்லுலாயிட் வடிவமே இப்படம் என்கிறார் டைரக்டர் ஏ.எம்.ஆர்.ரமேஷ். ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளர் துவாரகநாத், மூன்று காலகட்டத்தை பிரித்து தனித்தனி வண்ணங்கள் படமாக்கி உள்ளார்.
பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது பெங்களூர் டி.ஜி.பி. ரோட்டில் நடந்த கலவரம் அதே பகுதியில் ஆயிரக்கணக்கான துணை நடிகர்களை வைத்து படமாக்கப்பட்டுள்ளது. நிஜசம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக பல நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தியிருக்கிறார்களாம்.