ஒவ்வொரு குடும்பத்திலும் படித்த இளைஞர்கள், வேலை இல்லாமல் காதல் மோகத்தில் ஊர் சுற்றி்த்திரியும் மொக்க பசங்களின் கதை. நான்கு இளைஞர்கள், காதலுக்காக அடிக்கும் லூட்டிகள். இதனால் இவர்கள் சந்திக்கும் அவமானங்கள், பிரச்னைகளையும் காமெடி கலந்து சொல்லப்படுகிறது. பசங்களின் மனதில் நல்ல எண்ணங்களும், உதவி செய்யும் மனப்பாங்கும் எப்போதும் இருக்கும் என்பதையும் எதிர்காலத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்பதையும், இளைஞர்களின் வழிகாட்டியாக இருக்கும் என்பதையும் கூறியிருக்கிறோம் என்கிறார் இயக்குநர்.
இப்படத்தில், புகைபிடிக்கும் காட்சிகள், மது அருந்தும் காட்சிகள், இரட்டை அர்த்த வசனங்கள், ஆபாச உடைகள் எதுவும் கிடையாது.
அப்பாடக்கர் பொண்ணு நாங்க டுபாக்கூர் இல்ல...என்ற பாடலை, கானா பாலா பாடியுள்ளார். நகினா எனும் புதிய வரவு குத்தாட்டம் ஆடியுள்ளார்.
உன்னைத்தேடி காத்திருந்தேன் எனும் இனிமையான பாடலும், புள்ளியில் அடங்காத கோலங்கள் என்ற பாடலை, சிறுவர்களே பாடியுள்ளனர்.
திருப்பத்தூர், திருவண்ணாமலை, ஜோலார்பேட்டை, நாட்றாம்பள்ளி, சென்னை போன்ற இடங்களில், படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.
நடிகர்கள், நடிகைகள்
கெளதம், பாவேந்தன், சுரேஷ்பாபு சந்தோஷ் கதாநாயகர்களாகவும், சத்யஸ்ரீ கதாநாயகியாகவும், வில்லனாக சுதீப் நடிக்க, வர்ஷா, சிந்து, நகினா, லட்சுமி, கனகப்ரியா, பயில்வான் ரங்கநாதன், செல்வநாதன், மாஸ்டர் வருண், மற்றும் மாஸ்டர் வருண்
ஒளிப்பதிவு : அல்கேஷ்
இசை : ஆல்ரின் - மணீஷ்
கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு மற்றும் இயக்கம் : செல்வநாதன்