எஸ்.எஸ்.கே.கிரியேசன்ஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பாக கே.சி.குருநாத் சல்சானி தயாரிக்கும் படம் - “போர்க்களத்தில் ஒரு பூ”. இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட தொலைக்காட்சி அறிவிப்பாளர் இசைப்பிரியாவின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட படம் இது. பாலாஜி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கும் பிரியா இசைப்பிரியாவின் கதாப்பாத்திரமேற்று நடிக்கிறார். மற்றும் பிரபாகரன், சுமந்தன், சுபாஷ்சந்திரபோஸ், ராதா, ரேகா, ஸ்ரீலஷ்மி ஆகியோரும் நடிக்கிறார்கள்.
படம் பற்றி இயக்குனர் கு.கணேசனிடம் கேட்டோம்... இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாரான இசைபிரியாவின் குழந்தை பருவம் முதல் இளமைப் பருவம், குடும்ப வாழ்க்கை மற்றும் படுகொலை வரை கதையாகப்பட்டிருகிறது. நெஞ்சை உருக்கும் சம்பவங்கள் கொண்ட படமாக “போர்க்களத்தில் ஒரு பூ” உருவாகிறது. படத்தின் கதையோட்டத்திற்கு இளையராஜாவின் இசை உயிர் கொடுத்திருக்கிறது. சொல்லப்போனால் இசைபிரியாவின் வாழ்கைக்கு இளையராஜாவின் இசை உயிர் கொடுத்திருக்கிறது என்றார் கு.கணேசன்.