புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
இசைக்கு ராஜாவாக நான் என்றும் ராஜா என நிரூபித்தவர் இசையமைப்பாளர் இளையராஜா. அவரின் 78வது பிறந்த தினம் இன்று. தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில், 1943, ஜூன் 2ம் தேதி பிறந்தவர் இளையராஜா. இயற்பெயர் ராசய்யா. சிறு வயதிலேயே ஆர்மோனியம், கிடார் வாசிப்பதில் தேர்ச்சி பெற்றார். தன் சகோதரர்கள் உடன் சேர்ந்து கச்சேரி மற்றும் நாடகங்களில் இசை அமைத்தார். 1976ல், அன்னக்கிளி படம் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உட்பட, 1,000த்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ளார். முதல்முறையாக, தமிழ் சினிமாவில், ஸ்டீரியோ முறையில் இசை அமைத்தார். ஏராளமான இசைத் தொகுப்புகளை வெளியிட்டு வருகிறார். பல நுால்கள் எழுதியுள்ளார். பத்மபூஷண், பத்மவிபூஷண் , கலைமாமணி உள்பட, ஏராளமான விருதுகள் பெற்றுள்ளார். சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொண்டவர். தன் தாய்க்கு, சொந்த ஊரில் கோவில் கட்டியுள்ளார்.
சினிமாவில் 40 ஆண்டுகளுக்கு மேலாக பயணித்து வருபவர் இளையராஜா. இன்றும் அரை டஜன் படங்களுக்கு மேல் இசையமைத்து வருகிறார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்கள், ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள், எத்தனையோ பாடலாசிரியர்கள், பாடகர்கள், பாடகிகள், இசைக்கலைஞர்கள், கோடிக்கணக்கான ரசிகர்கள் என அவர் பதித்த தடங்கள் ஏராளம், ஏராளம். எத்தனை சர்ச்சைகள் வந்தாலும் அதையெல்லாம் கடந்து தன் இசையால் ஒவ்வொரு நொடியும் மக்களை தன்னிலை மறக்க வைப்பவர் இளையராஜா. உலகம் முழுவதும் இசைக்கு பல வடிவங்கள் உண்டு. அது போல இசையின் ஒரு வடிவம் என்று இளையராஜாவின் இசையையும் சொல்ல வேண்டும். சினிமா இசையிலும் பல புதுமைகளைப் புகுத்தியவர் அவர்.
இன்று உலகமே கொரோனாவால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. வீட்டிலேயே முடங்கி கிடந்தவர்களுக்கு நிச்சயம் இவரின் பாடல்களும், இசையும் மக்களை தாலாட்ட வைத்திருக்கும். இசை தெரிந்தவர்களும், ரசிக்கத் தெரிந்தவர்களும் இன்று இளையராஜாவுக்கு தங்களது வாழ்த்துகளைத் சமூகவலைதளங்களில் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக சமூகவலைதளங்களில் இளையராஜாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இசை மழையில் நனைய விட்ட அவர் இன்றைய தினம் ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனைந்து கொண்டிருக்கிறார்.
மேலும் இளையராஜா பற்றிய பல சுவாரஸ்ய தகவல்களுக்கும் https://cinema.dinamalar.com/ilayaraja/ இந்த லிங்க்கை கிளிக் செய்யுங்கள்.