லலித் மோடியின் பயோபிக்கில் நடிக்கிறாரா ரன்வீர் சிங்? | பிரபல பாலிவுட் நடிகரின் மனைவியிடம் 16 கோடி மோசடி | பிளாஷ்பேக் : நடனத்திற்காக அஞ்சலிதேவி நடித்த படம் | நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் | வெற்றியை தேடி ஓடாதீங்க... திறமையை மேம்படுத்துங்க : மனோஜ் பாஜ்பாய் |

தமிழ் சினிமாவில் இயக்குனர் கே.பாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டு, நடிப்புத் திறமை வாய்ந்த நடிகையாக வலம் வந்தவர் நடிகை சரிதா. குறிப்பாக, பெண்களை மையப்படுத்தி உருவான பல படங்களில் அவர் கதாநாயகியாக நடித்துள்ளார். அவர் பீக்கில் இருந்த சமயத்தில் மலையாள நடிகர் முகேஷை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். ஆனாலும், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகத் திருமணமான சில வருடங்களிலேயே பிரிந்தனர். அதேசமயம், 2011-ல் தான் இவர்களுக்கு முறைப்படி விவாகரத்து கிடைத்தது. இவர்களுக்கு ஷ்ரவண் மற்றும் தேஜஸ் என இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.
இந்த நிலையில். தான் தனித்து வாழத் தொடங்கிச் சரியாக 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதாகத் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ள சரிதா, தனது பிள்ளைகளைத் தனியாக வளர்க்கும் வாய்ப்பை வழங்கியதற்காகத் தனது முன்னாள் கணவர் முகேஷுக்குத் தனது நன்றியையும் தெரிவித்துள்ளார். இந்த 30 ஆண்டுகளில் ஒரு வலிமையான அம்மாவாகத் தன்னைக் கொண்டாடுவதாகக் கூறியுள்ளா சரிதா. தனித்துவிடப்பட்டதால் தான் இவ்வளவு தைரியமான பெண்ணாக மாற முடிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.