'கருப்பு' ஒளிப்பதிவாளருக்கு கார் பரிசளித்த சூர்யா | மீண்டும் நடிக்க வந்தார் ரவி மோகன் | 'ஜனநாயகன்' பிரச்னை.. எனக்கு சொல்ல தைரியமில்லை: எச்.வினோத் ஓபன் டாக் | பிளாஷ்பேக்: வியாபார போட்டியில் வென்று, வியப்பில் ஆழ்த்திய ஏ வி மெய்யப்ப செட்டியார் | ஓய்வு நேரத்தில் என்ன செய்வீர்கள்?: ஏ.ஆர்.ரஹ்மான் சொன்ன பதில் | விமர்சனங்களால் பிக்அப் ஆகும் 'பிளாஸ்ட்' | ''சென்னை என் தாய்வீடு'': ராம்சரண் பேச்சு | நான் நடந்தால், பேசினால் சாதனைதான்: சிம்பொனி நிகழ்ச்சியில் இளையராஜா | ஸ்ரீதேவியுடன் நடித்தேன், அவர் மகளுடனும் நடித்து விட்டேன் : ரவிகிஷன் பெருமிதம் | ஸ்பை திரில்லரான 'ஆல்பா' படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் ஆலியா பட் |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித் குமார். அவர் நடித்த 'குட் பேட் அக்லி' படம் வெளிவந்து ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது. ஆனாலும், அவரது அடுத்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
அடுத்த படத்தையும் 'குட் பேட் அக்லி' படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்கப் போகிறார். அதில் எந்த மாற்றமும் இல்லை என்பது உறுதியான தகவல். ஆனால், படத்தைத் தயாரிக்கப் போவது யார் என்ற கேள்வி மட்டும் கடந்த சில மாதங்களாக இருந்து வந்தது.
'குட் பேட் அக்லி' படத்தைத் தயாரித்த தெலுங்கு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ், மற்றும் 'விஸ்வாசம்' படத்தைத் தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ், மற்றும் அஜித்தை எப்படியாவது தங்கள் நிறுவனத்தில் நடிக்க வைத்துவிட வேண்டும் என்று முயற்சித்த வேல்ஸ் பிலிம்ஸ் ஆகியவை போட்டியில் இருந்தன. இருந்தாலும் சம்பளம் உள்ளிட்ட சில விஷயங்களால் அவை நடக்கவில்லையாம்.
இதனிடையே, சொந்தமாக படத் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து அதில் படத்தைத் தயாரித்துக் கொள்ளலாம் என்று அஜித் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. அதற்கான வேலைகள் தற்போது நடந்து வருகிறதாம். முதற்கட்டமாக அஜித்தின் ரேஸ் பற்றிய ஆவணப்படம் அவரது தயாரிப்பில் தான் உருவாகி வருகிறது. விரைவில் சினிமா படம் பற்றிய அறிவிப்பும், அடுத்த மே மாதம் படப்பிடிப்பும் நடக்கும் என்கிறார்கள்.




