'கருப்பு' ரிலீஸால் தள்ளிப் போகும் சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' | முதல்வராக பதவியேற்ற முதல்நாளே கோரிக்கை வைத்த திருப்பூர் சுப்ரமணியன் | விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளில் வெளியான 'ரவுடி ஜனார்த்தனா' போஸ்டர்! | 'திரிஷ்யம்-3' வெற்றி பெற்றால் 4, 5ம் பாகமும் உருவாகும்!- மோகன்லால் வெளியிட்ட தகவல் | 'கடார் 3' உறுதி ; அமிஷா பட்டேல் வெளியிட்ட தகவல் | ரஜினி, கமல் படத்தில் திரிஷா? | ஒரு முறை இல்லை, பலமுறை வருவது தான் காதல்! - நடிகை தமன்னா | 'ஜெயிலர் 2' படத்தின் முதல் பாடல் எப்போது? | மீண்டும் இணையும் 'ரௌத்திரம்' பட கூட்டணி! | அபிஷன் ஜீவின்த் படத்தில் இரண்டு நாயகிகள்! |

ஓடிடி தளங்கள் பிரபலமான பிறகு சினிமா தியேட்டர்களை நடத்துவதில் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது என கடந்த சில வருடங்களாக தியேட்டர்காரர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
புதிய படங்கள் வெளியான நான்கு வாரங்களில் ஓடிடி தளங்களுக்குப் படங்களைக் கொடுப்பதற்குப் பதிலாக, எட்டு வாரங்களுக்குப் பிறகே கொடுக்க வேண்டும் என்றும் சமீபத்தில் தென்னிந்திய தியேட்டர் உரிமையாளர்கள் சார்பாக நடந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அப்போது தெலுங்கானாவில் எதிர்காலத்தில் சதவீத முறையில் மட்டுமே படங்களைத் திரையிட வேண்டும் என்ற முடிவும் எட்டப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் நாளை முதல் ஹைதராபாத்தில் உள்ள 23 தியேட்டர்களில் சதவீத முறையில் மட்டுமே திரைப்படங்களைத் திரையிட உள்ளதாக தெலுங்கானா மாநில திரைப்பட வர்த்தக சபை அறிவித்துள்ளது.
அதன்படி முதல் வாரத்தில் 60 சதவீதம், இரண்டாவது வாரத்தில் 50 சதவீதம், மூன்றாவது வாரத்தில் 40 சதவீதம் என்ற வகையில் வினியோகஸ்தர்கள் பங்கு தரப்பட உள்ளது. இது போகப் போக மாநிலம் முழுவதும விரிவுபடுத்தப்படும் எனத் தெரிகிறது.