Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரம்யா கிருஷ்ணன், மன்சூர் அலிகான் கேரக்டரில் முதலில் நடித்தவர்கள் : கேப்டன் பிரபாகரன் குறித்து ஆர்.கே.செல்வமணி

09 ஆக, 2025 - 01:46 IST
எழுத்தின் அளவு:
Ramya-Krishnan-and-Mansoor-Ali-Khan-were-the-first-to-play-the-character-R.K.-Selvamani-on-Captain-Prabhakaran
Advertisement

ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் படம் 34 ஆண்டுகளுக்குபின் புத்தம்புது பொலிவுடன், டிஜிட்டலில் ஆகஸ்ட் 22ல் ரீ ரிலீஸ் ஆகிறது. சென்னையில் நடந்த இந்த பட விழாவில் விஜயகாந்த் மூத்த மகன் விஜய பிரபாகரன் கலந்து கொண்டு தந்தை குறித்து பேசும்போது அழுதார்.

''அப்பா பல படப்பிடிப்பு சம்பவங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்வார். கேப்டன் பிரபாகரன் குறித்து நிறைய பேசியிருக்கிறார். அவர் இல்லாவிட்டாலும், அவர் நம்முடன்தான் இருக்கிறார். இந்த விழாவில் கலந்து கொள்ள வாக்கு கொடுத்தேன். பல தடைகள் வந்தாலும் அப்பா மாதிரி சொன்னபடி செல்ல வேண்டும் என்பதற்காக இங்கு வந்தேன் '' என்று அழுதார்.

இயக்குனர் ஆர்.கே.செல்வமணி கேப்டன் பிரபாகரன் குறித்து நிறைய பேசினார். ''இந்த படத்தை 94வது படமாக தொடங்கினோம். ஆனால், படப்பிடிப்பு தாமதம் ஆனது. இதில் நடித்த சரத்குமாருக்கு அடிபட்டது. அவரை வைத்து சில காட்சிகள் எடுத்த நிலையில், வேறு நடிகரை மாற்றலாமா என யோசித்தபோது, சரத்குமார் வரும் வரை காத்திருப்போம். அவரை ஏமாற்றக்கூடாது என்று விஜயகாந்த் கூறினார்.

முதலில் சரண்யா பொன்வண்ணன் தான் ரம்யாகிருஷ்ணன் ரோலில் நடித்தார். சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. உடை உட்பட பல விஷயத்தில் அவருடன் கருத்து வேறுபாடு. தவிர, அவரின் உடல்நிலை காரணமாகவும் படத்தில் இருந்து விலக, யாரை ஒப்பந்தம் செய்யலாம் என யோசித்தோம். ரம்யா கிருஷ்ணன் பெயரை சிலர் சொன்னார்கள். அவரோ தமிழில் தோல்வி படம் கொடுத்துவிட்டு, தெலுங்கில் நடித்து வந்தார். அவரை எதிர்ப்புகளை மீறி நடிக்க வைத்தோம். ஆட்டமா தேரோட்டமா பாடலும், அவர் சீன்களும் இன்றும் பேசப்படுகிறது.

அதேபோல், நடிகர் கரிகாலனை தான் வீரபத்திரன் கேரக்டரில் முதலில் நடிக்க வைத்தோம். மன்சூர் அலிகான் சாய்சில் இருந்தார். படப்பிடிப்பில் ஒருநாள் நான் யார் தெரியுமா வீரபத்திரன் என்று சொல்லி, படக்குழு உறுப்பினரை அடித்துவிட்டார் மன்சூர் அலிகான். அந்த கேரக்டராகவே மாறியிருந்தார். உடனே அவரை பிக்ஸ் செய்தோம். படப்பிடிப்பு சமயத்தில் பல விபத்து, விஜயகாந்த் அவ்வளவு ரத்தம் சிந்தினார். இந்த படப்பிடிப்பு கிளைமாக்ஸ் எடுத்துக் கொண்டிருந்தபோது விஜய பிரபாகரன் பிறந்தார். படத்தின் பெயர் அவருக்கு வந்தது. 34 ஆண்டுகள் கழித்து இந்த விழாவுக்கு அவரே சிறப்பு விருந்தினர்'' என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கூலி : பெங்களூருவில் அதிகபட்ச கட்டணம் ரூ.2000கூலி : பெங்களூருவில் அதிகபட்ச ... 28 ஆண்டுகளுக்குபின் நடிக்கும் டிஸ்கோ சாந்தி 28 ஆண்டுகளுக்குபின் நடிக்கும் டிஸ்கோ ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in