ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | தமிழகம் எனக்கு உறுதுணையாக உள்ளது : நன்றி சொன்ன கமல் | விஜய்சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தேவுக்கு பதிலாக நிவேதா தாமஸ்? | விக்ரம் சுகுமாரன் மறைவுக்குப் பிறகு ஓடிடியில் வெளியான மதயானை கூட்டம் | தாரே ஜமீன் பர் படத்தை யு-டியூப்பில் இலவசமாக வெளியிடும் அமீர்கான் | அறிவுரை சொல்பவர்கள் முதலில் தாங்கள் ஒழுங்கானவர்களா? : நடிகர் விநாயகன் கிண்டல் | அவசர அவசரமாக முடிக்கப்பட்ட பாலியல் வழக்குகள் ; அரசுக்கு எதிராக பார்வதி காட்டம் | ஹரி ஹர வீர மல்லு படம் தள்ளிப்போகிறதா? | ரேவதி இயக்கத்தில் பிரியாமணியின் ‛குட் ஒயிப்' | பெண் இயக்குனரின் பேண்டசி படம் 'மரகதமலை' |
நியூயார்க்கின் பிரபல பத்திரிகையான போர்ப்ஸ், வருடம் தோறும் இந்தியாவில் அதிக அளவில் பிரபலமான 30 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டு வருகிறது. இதில் பொழுதுபோக்கு, கல்வி, வணிகம், பொருளாதாரம், விளையாட்டு, இசை, விவசாயம் என பல்வேறு பிரிவுகளில் ஒவ்வொரு வருடமும் பிரபலமானவர்களின் பெயர்கள் இந்த 30 பேர் கொண்ட பட்டியலில் இடம்பெறும்.
அந்த வகையில் 2025ம் வருடத்திற்கான 30 வயதுக்கு கீழான 30 பிரபலங்களின் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டுள்ளது போர்ப்ஸ் பத்திரிக்கை. இதில் பொழுதுபோக்கு என்கிற பிரிவில் நடிகைகளில் அபர்ணா பாலமுரளி மட்டுமே இந்த வருட பிரபலமாக இடம் பிடித்துள்ளார். இவர் தவிர பாலிவுட் நடிகர் ரோகித் சரப் என்பவரும் இதே பிரிவில் இடம் பிடித்துள்ளார்.
கடந்த வருடம் இவர்களின் பிரபல தன்மையை கணக்கில் கொண்டு இந்த பட்டியலில் இவர்கள் இடம் பிடித்துள்ளனர். அந்த வகையில் அபர்ணா பாலமுரளி கடந்த வருடம் தமிழில் தனுஷ் இயக்கத்தில் வெளியான 'ராயன்', மலையாளத்தில் நடித்த 'கிஷ்கிந்தா காண்டம்' மற்றும் 'ருத்ரம்' ஆகிய படங்களில் தனது நடிப்பில் அழுத்தமான முத்திரை பதித்திருந்தார். கடந்த 2016ல் மலையாளத்தில் வெளியான 'மகேஷ்ஷிண்டே பிரதிகாரம்' என்கிற படத்தில் பஹத் பாசிலுக்கு ஜோடியாக அறிமுகமான இவர், அதன் பிறகு தமிழில் 'எட்டு தோட்டாக்கள், சர்வம் தாள மயம்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். 2020ல் சூர்யாவுக்கு ஜோடியாக இவர் நடித்த 'சூரரைப்போற்று' திரைப்படம் இவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்று தந்தது குறிப்பிடத்தக்கது.