'டகாய்ட்' பட ரிலீஸை முன்னிட்டு ஹீரோவுடன் திருப்பதி தரிசனம் செய்த மிருணாள் தாக்கூர் | பிளாஷ்பேக்: புரட்சி நடிகரின் படத்தில், புலியுடன் சண்டையிட்ட புரட்சிப் பெண் திரைக்கலைஞர் | கஞ்சா பயன்படுத்தியதாக மலையாள நடிகரின் மகன் கைது ; தந்தையின் நம்பிக்கையை தகர்த்தார் | சென்சார் போர்டின் இரட்டை நிலைப்பாடு ; தி கேரளா ஸ்டோரி இயக்குனர் குற்றச்சாட்டு | துபாயில் சிக்கிக்கொண்ட பாலிவுட் நடிகை ; உதவி கேட்டு பிரதமருக்கு கோரிக்கை | பாடலை மாதக்கணக்கில் மெருகேற்றும் ஹாரிஸ்: இயக்குனர் ஏ.எல்.விஜய் | நடிப்பு உலகில் அடியெடுத்து வைத்த கிரிக்கெட் நடுவர் அனில் சவுத்ரி | ரஜினி, கமல் படத்தில் இந்த இளம் நடிகையா? | 'தனுஷ் 56' படப்பிடிப்பு செப்டம்பரில் துவங்குகிறது! | ஒரே நாளில் வெளியாகும் இரண்டு நீளமான படங்கள்! |

தென்னிந்திய ரசிகர்களிடம் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் வரவேற்பை பெற்றவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. சினிமாவில் மட்டுமல்ல பொது இடங்களிலும் கூட எப்போதும் புன்னகையுடன் வலம் வரும் ராஷ்மிகாவை பார்க்கும் போது எதிரில் இருப்பவருக்கும் பாசிட்டிவ் எனர்ஜி தொற்றிக்கொள்ளும். அது மட்டுமல்ல எந்த இடத்திலும் ரசிகர்களை ஒதுக்காமல் அவர்களுடன் பேசி, புகைப்படம் எடுத்துக் கொள்ள தயங்காதவர்.
இந்த நிலையில் கேரளாவில் உள்ள கருநாகப்பள்ளி பகுதியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சமீபத்தில் வருகை தந்திருந்தார் ராஷ்மிகா. இந்த நிகழ்ச்சியில் அவரே எதிர்பாராத விதமாக கிட்டத்தட்ட 2000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் அவரை பார்ப்பதற்கும் வரவேற்பதற்கும் தயாராக கூடியிருந்ததை பார்த்து இன்ப அதிர்ச்சியில் திக்கு முக்காடி போய்விட்டதாக கூறியுள்ளார் ராஷ்மிகா மந்தனா. அவர்களை உர்ச்சாகப்படுத்தும் விதமாக வாரிசு படத்தில் இடம்பெற்ற ரஞ்சிதமே பாடலின் சில வரிகளுக்கு நாணமும் ஆடினார் ராஷ்மிகா.
“இத்தனை பேர் கூடியிருந்தாலும் இந்த நிகழ்ச்சி எந்தவித குழப்பமும் இல்லாமல் அழகாக நிர்வகிக்கப்பட்டது. இத்தனை பேரின் அன்பை பெறுவதற்காக நான் என்ன செய்தேன் என்று எனக்கு தெரியவில்லை, ஆனாலும் நான் உண்மையிலேயே ஆசீர்வதிக்கப்பட்டவள்” என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளதுடன் கேரள ரசிகர்களை டார்லிங் என்றும் புகழ்ந்துள்ளார் ராஷ்மிகா.




