மார்ச் 19ல் ஒரே ஒரு ரிலீஸ் தானா ? | ஆன்லைன் மோதல், ரசிகர்கள் சண்டை வேண்டாம் - பவன் கல்யாண் அட்வைஸ் | 10 நாட்கள் நடித்த நிலையில் கமல் வெளியேறியதால் நின்று போன படம் ; இயக்குனர் பாலச்சந்திர மேனன் புது தகவல் | ‛மகாராஜா 2' கதை தயார் ; உறுதிப்படுத்திய விஜய்சேதுபதி | இரண்டாவதாக பெண் குழந்தை பெற்ற பூர்ணா ; பிறந்த நாளன்றே பெயரும் சூட்டினார் | ‛ஆடுஜீவிதம்' இயக்குனர் மகன் திருமணத்தில் கலந்து கொண்ட மோகன்லால் நெகிழ்ச்சி | திருமண நிகழ்வில் திரிஷாவுடன் இணைந்து கலந்துகொண்ட பார்த்திபன் மகள் | 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடி தானா? | கென் கருணாஸூக்காக காய்ச்சல் உடன் வந்த தனுஷ்! | மார்ச் 16ல் 'நூறு சாமி' படத்தின் பர்ஸ்ட் லுக் |

தென்னிந்திய ரசிகர்களிடம் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் வரவேற்பை பெற்றவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. சினிமாவில் மட்டுமல்ல பொது இடங்களிலும் கூட எப்போதும் புன்னகையுடன் வலம் வரும் ராஷ்மிகாவை பார்க்கும் போது எதிரில் இருப்பவருக்கும் பாசிட்டிவ் எனர்ஜி தொற்றிக்கொள்ளும். அது மட்டுமல்ல எந்த இடத்திலும் ரசிகர்களை ஒதுக்காமல் அவர்களுடன் பேசி, புகைப்படம் எடுத்துக் கொள்ள தயங்காதவர்.
இந்த நிலையில் கேரளாவில் உள்ள கருநாகப்பள்ளி பகுதியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சமீபத்தில் வருகை தந்திருந்தார் ராஷ்மிகா. இந்த நிகழ்ச்சியில் அவரே எதிர்பாராத விதமாக கிட்டத்தட்ட 2000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் அவரை பார்ப்பதற்கும் வரவேற்பதற்கும் தயாராக கூடியிருந்ததை பார்த்து இன்ப அதிர்ச்சியில் திக்கு முக்காடி போய்விட்டதாக கூறியுள்ளார் ராஷ்மிகா மந்தனா. அவர்களை உர்ச்சாகப்படுத்தும் விதமாக வாரிசு படத்தில் இடம்பெற்ற ரஞ்சிதமே பாடலின் சில வரிகளுக்கு நாணமும் ஆடினார் ராஷ்மிகா.
“இத்தனை பேர் கூடியிருந்தாலும் இந்த நிகழ்ச்சி எந்தவித குழப்பமும் இல்லாமல் அழகாக நிர்வகிக்கப்பட்டது. இத்தனை பேரின் அன்பை பெறுவதற்காக நான் என்ன செய்தேன் என்று எனக்கு தெரியவில்லை, ஆனாலும் நான் உண்மையிலேயே ஆசீர்வதிக்கப்பட்டவள்” என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளதுடன் கேரள ரசிகர்களை டார்லிங் என்றும் புகழ்ந்துள்ளார் ராஷ்மிகா.




