பிளாஷ்பேக் : சோக ராகங்கள் கூட சுக ராகங்களாக மாறும் எம்ஜிஆரின் பாடல்கள் | செப். 20ல் வேட்டையன் பட இசை வெளியீட்டு விழா | கார்த்தி 29வது படத்தை இயக்கும் டாணாக்காரன் பட இயக்குனர் | மீண்டும் இணைந்த செல்வராகவன் - ஜி.வி. பிரகாஷ் கூட்டணி! | மூக்குத்தி அம்மன் 2வை இயக்கும் சுந்தர் சி | ஜானி மாஸ்டரை கட்சியிலிருந்து நீக்கிய ஜனசேனா கட்சி | 'குட் பேட் அக்லி' படத்தில் விஜய்யின் வசனத்தை பேசி நடிக்கும் அஜித்! | அசோக்செல்வன் எப்படிப்பட்டவர்? உடைத்து பேசிய கீர்த்தி பாண்டியன்! | பாலிவுட்டில் வில்லனாக என்ட்ரி கொடுக்கும் சூர்யா? | 7 மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் லால் சலாம்! |
தென்னிந்திய ரசிகர்களிடம் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் வரவேற்பை பெற்றவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. சினிமாவில் மட்டுமல்ல பொது இடங்களிலும் கூட எப்போதும் புன்னகையுடன் வலம் வரும் ராஷ்மிகாவை பார்க்கும் போது எதிரில் இருப்பவருக்கும் பாசிட்டிவ் எனர்ஜி தொற்றிக்கொள்ளும். அது மட்டுமல்ல எந்த இடத்திலும் ரசிகர்களை ஒதுக்காமல் அவர்களுடன் பேசி, புகைப்படம் எடுத்துக் கொள்ள தயங்காதவர்.
இந்த நிலையில் கேரளாவில் உள்ள கருநாகப்பள்ளி பகுதியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சமீபத்தில் வருகை தந்திருந்தார் ராஷ்மிகா. இந்த நிகழ்ச்சியில் அவரே எதிர்பாராத விதமாக கிட்டத்தட்ட 2000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் அவரை பார்ப்பதற்கும் வரவேற்பதற்கும் தயாராக கூடியிருந்ததை பார்த்து இன்ப அதிர்ச்சியில் திக்கு முக்காடி போய்விட்டதாக கூறியுள்ளார் ராஷ்மிகா மந்தனா. அவர்களை உர்ச்சாகப்படுத்தும் விதமாக வாரிசு படத்தில் இடம்பெற்ற ரஞ்சிதமே பாடலின் சில வரிகளுக்கு நாணமும் ஆடினார் ராஷ்மிகா.
“இத்தனை பேர் கூடியிருந்தாலும் இந்த நிகழ்ச்சி எந்தவித குழப்பமும் இல்லாமல் அழகாக நிர்வகிக்கப்பட்டது. இத்தனை பேரின் அன்பை பெறுவதற்காக நான் என்ன செய்தேன் என்று எனக்கு தெரியவில்லை, ஆனாலும் நான் உண்மையிலேயே ஆசீர்வதிக்கப்பட்டவள்” என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளதுடன் கேரள ரசிகர்களை டார்லிங் என்றும் புகழ்ந்துள்ளார் ராஷ்மிகா.