'நந்தி விருதுகள்' பெருமையை மீட்க விரும்பும் ஆந்திரா | சத்தங்களுக்கு மத்தியில் புதிய விடியலை நோக்கி பயணம் : கெனிஷாவின் பதிவு வைரல் | நடிகர் ஹம்சவர்தன் 2வது திருமணம் | ஒரு காட்சிக்காக படத்தின் மொத்த உரிமத்தையும் வாங்கிய 'ஜனநாயகன்' படக்குழு | கூகுள் மூலம் தமிழ் கற்று கொண்ட ருக்மணி வசந்த் | கதாநாயகனாக அறிமுகமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால் |
ஜென்டில்மேன், இந்தியன், சிவாஜி, எந்திரன் உட்பட பல தமிழ் திரைப்படங்களை இயக்கியவர் ஷங்கர். இவர் நேற்று மதியம் தனது வழக்கறிஞருடன் சென்னை ஆயிரம் விளக்கில் அமைந்துள்ள அமலாக்கத்துறை சென்னை மண்டல அலுவலகத்தில் வழக்கு ஒன்றிற்காக விசாரணைக்கு ஆஜரானார். அமலாக்கத்துறை துணை இயக்குநர் மல்லிகா அர்ஜுனா முன் ஆஜரான இயக்குநர் ஷங்கரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர் .
பண விவகாரம் தொடர்பாக 3 மணி நேரம் இயக்குநர் ஷங்கரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக கூறப்படுது. ஆனால், அது என்ன வழக்கு என்பதை அமலாக்கத்துறை அதிகாரிகள் கூற மறுத்து விசாரணைக்கு பின்னர் வழக்கு குறித்த விவரங்களை தெரிவிப்பதாக சொல்லி இருக்கிறார்கள் .
இதற்கிடையில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் இயக்குநர் ஷங்கர் விசாரணைக்கு ஆஜரான தகவல் அறிந்து பல ஊடகத்தினர் அமலாக்கத்துறை அலுவலகத்தின் முன்பு ஒன்று கூடினர். ஷங்கர் தனது காரில் விசாரணைக்காக அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வந்திருந்தார். அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு ஊடகத்தினர் குழுமியிருந்ததை அறிந்து கொண்ட இயக்குநர் ஷங்கர் விசாரணை முடிந்த பிறகு ஊடகத்தினரின் கண்ணில் படாமல் பின்வாயில் வழியாக வாடகை காரில் சென்றுள்ளார் .
இந்நிலையில் வழக்கு தொடர்பாக இயக்குநர் சங்கரை மீண்டும் அழைத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக அமலாக்கத்துறை வட்டாரங்களில் கூறப்படுகிறது.