லலித் மோடியின் பயோபிக்கில் நடிக்கிறாரா ரன்வீர் சிங்? | பிரபல பாலிவுட் நடிகரின் மனைவியிடம் 16 கோடி மோசடி | பிளாஷ்பேக் : நடனத்திற்காக அஞ்சலிதேவி நடித்த படம் | நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் | வெற்றியை தேடி ஓடாதீங்க... திறமையை மேம்படுத்துங்க : மனோஜ் பாஜ்பாய் |

'கிங்டம்' படத்திற்கு பிறகு தற்போது 'ரவுடி ஜனார்த்தனா, ரணபாலி' போன்ற படங்களில் நடித்து வருகிறார் விஜய் தேவரகொண்டா. ரவி கிரண் கோலா இயக்கும் இந்த படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் கீர்த்தி சுரேஷ், கிருத்தி ஷெட்டி, விவேக் ஓபராய், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
இந்நிலையில் நேற்று விஜய் தேவரகொண்டா தனது 38வது பிறந்த நாளை கொண்டாடியுள்ள நிலையில், ரவுடி ஜனார்த்தனா பட குழுவினர் ஒரு அதிரடியான போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள். இந்த போஸ்டரில் கையில் பட்டா கத்தியுடன் உடம்பில் ரத்தம் வழிந்த நிலையில் காணப்படுகிறார் விஜய் தேவரகொண்டா. அதோடு, உலகையே எதிர்த்து போராடுபவன், அன்பிடம் மட்டும் சரணடைகிறான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும்,நேற்று தனது ரசிகர்களுடன் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடியுள்ள விஜய் தேவரகொண்டா, தனது வீட்டருகே தன்னை காணவந்த ரசிகர்களை பார்த்து தனது மனைவி ராஷ்மிகா மந்தனாவுடன் பால்கனியில் நின்றபடி கை அசைத்துள்ளார். அதையடுத்து விஜய தேவரகொண்டா வெளியிட்டுள்ள பதிவில், ரசிகர்களின் அன்பு என்னை உணர்ச்சிவசப்பட வைக்கிறது. இன்னும் கடினமாக உழைப்பதற்கு தூண்டுகிறது. எனது ரசிகர்களுக்கு கடவுளின் ஆசீர்வாதம் எப்போதுமே உண்டு என்று கூறியுள்ளார்.