பிரபல பாலிவுட் நடிகரின் மனைவியிடம் 16 கோடி மோசடி | பிளாஷ்பேக் : நடனத்திற்காக அஞ்சலிதேவி நடித்த படம் | நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் | வெற்றியை தேடி ஓடாதீங்க... திறமையை மேம்படுத்துங்க : மனோஜ் பாஜ்பாய் | ‛சிங் கீதம்' படம் என் 40 ஆண்டு கனவு : இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் |

மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான 'திரிஷ்யம்' மற்றும் அதன் இரண்டாம் பாகம் என இரண்டுமே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. இதனைத் தொடர்ந்து தற்போது இந்தப் படத்தின் மூன்றாம் பாகம் வரும் மே 21ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. முதல் பாகத்தில் நடித்த மோகன்லாலின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் போலீஸ் அதிகாரியான ஆஷா சரத், அவரது கணவர் ஆகியோர் இரண்டாம் பாகத்திலும் தொடர்ந்தனர். இரண்டாம் பாகத்தில் புதிய போலீஸ் அதிகாரி உள்ளிட்ட சிலர் இணைந்தனர்.. இந்த மூன்றாம் பாகத்திலும் இவர்கள் தொடர்கின்றனர்.
அதே சமயம் முதல் பாகத்தில் மோகன்லாலை டார்ச்சர் செய்யும் போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்திருந்த கலாபவன் சாஜன் மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றார். ஆனால் இரண்டாம் பாகத்தில் அவர் இடம்பெறவில்லை. இந்தநிலையில் ஆச்சரியமாகத் தற்போது மூன்றாம் பாகத்தில் அவர் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார்.. அதேபோல இதில் இன்னொரு புது வரவாக நடிகை வீணா நந்தகுமார் பத்திரிகையாளராக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.