காதல், கனவுகள், மனித தொடர்புகளை 'தோ தீவானே சேஹர் மெய்ன்' பேசும் : மிருணாள் தாக்கூர் | தயாரிப்பாளர்களை குழியில் தள்ளும் இயக்குனர்கள் : சேரன் பரபரப்பு பேச்சு | விஜய் பட நடிகைக்கு நேரில் ஆஜராக நீதிமன்றம் பிடி வாரண்ட் | மம்முட்டி வாங்கி கொடுத்த 'ஹியரிங் எய்டு' கருவியை கழட்டி வீசிய தொழிலாளி | 'டூரிஸ்ட் பேமிலி' பாணி கதையில் ஹிந்தியில் நடிக்கும் பிரியாமணி | நானாக வாய்ப்பு கேட்ட ஒரே இயக்குனர் இவர்தான் ; மிருணாள் தாகூர் | பிளாஷ்பேக் : அக்கா அளவுக்கு சாதிக்க முடியாமல் போன தங்கை | சினிமாவிற்கு வரும் புதிய இரட்டை இசை அமைப்பாளர்கள் | 10 கோடி செலுத்த காலஅவகாசம் கேட்ட விஷால் மனு தள்ளுபடி | கடும் போட்டியில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் |

கீதா கோவிந்தம் என்கிற படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானது விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா ஜோடி. அதன்பிறகு டியர் காம்ரேட் படத்திலும் இவர்கள் இணைந்து நடித்தனர். ஆனால் கன்னடத்தில் தனது அறிமுகப்படத்தில் ராஷ்மிகா நடிக்கும்போது அந்தப்படத்தின் அந்தப்படத்தின் ஹீரோ ரக்சித் ஷெட்டிக்கும், இவருக்கும் காதல் மலர்ந்து நிச்சயதார்த்தம் வரை சென்றது.. ஆனால் அதன்பிறகு தெலுங்கில் ராஷ்மிகாவின் படங்கள் ஹிட்டாகி, முன்னணி நடிகையாக மாறியதும், நிச்சயதார்த்தத்தை ரத்துசெய்து, காதலரையும் பிரிந்துவிட்டார் ராஷ்மிகா.
மேலும் விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா இருவரும் இணைந்து அடுத்தடுத்த படங்களில் நடித்தது, விழாக்களில் ஒன்றாக கலந்துகொண்டது ஆகியவற்றின் மூலம் இவர்கள் இருவருக்குள்ளும் நட்பையும் தாண்டி காதல் மலர்ந்துள்ளதாக கடந்த இரண்டு வருடமாகவே சொல்லப்பட்டு வருகிறது. தற்போது அதை உறுதிப்படுத்தும் விதமாக ஒரு நிகழ்வு நடந்துள்ளது.
சில நாட்களுக்கு முன் விஜய் தேவரகொண்டா, தான் நடித்துவரும் லைகர் படத்தின் படப்பிடிப்பிற்காக பாரிஸ் சென்றார். அதேசமயம் தனது படங்களுக்கு சற்றே ஒய்வு கொடுத்த ரஷ்மிகா, அதே பாரிஸுக்கு டூர் கிளம்பி சென்றார். தற்போது லைகர் படப்பிடிப்பை முடித்து விஜய் தேவரகொண்டா ஊர் திரும்பியுள்ளார்.
இதை தொடர்ந்து ராஷ்மிகாவும் தனது ட்ரிப்பை முடித்து தற்போது ஐதராபாத் திரும்பியுள்ளார். இருவரும் பாரிஸில் சந்தித்துக்கொண்டதாக புகைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை என்றாலும், ராஷ்மிகாவின் இந்த தனிப்பட்ட பயணம் அவர்களது காதலை உறுதி செய்வது போலத்தான் இருக்கிறது என டோலிவுட்டில் பேசிக்கொள்கிறார்கள்..




