ஹிந்தி படத்தை வெளியிடுவதேன்? உதயநிதி பதில் | சிறந்த அறிமுக ஹீரோவுக்கான விருது பெற்ற சதீஷ் | கவர்னருடன் சந்திப்பு ; மீண்டும் அரசியல் வரும் திட்டமா - ரஜினி பதில் | பாலிவுட் படங்களை புறக்கணிக்கும் கிரித்தி ஷெட்டி | மராட்டிய மொழி படத்தில் ஷான்வி | சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி | 200 ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்தேன்: அமெரிக்க நடிகை அதிர்ச்சி தகவல் | கணவன் வீட்டில் அனுபவித்த கொடுமைகள்: மனம் திறந்தார் மகேஸ்வரி | அப்பு நினைவாக ஆம்புலன்ஸ் வழங்கிய பிரகாஷ்ராஜ் | ஹீரோயின் ஆன மாலாஸ்ரீ மகள் |
கீதா கோவிந்தம் என்கிற படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானது விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா ஜோடி. அதன்பிறகு டியர் காம்ரேட் படத்திலும் இவர்கள் இணைந்து நடித்தனர். ஆனால் கன்னடத்தில் தனது அறிமுகப்படத்தில் ராஷ்மிகா நடிக்கும்போது அந்தப்படத்தின் அந்தப்படத்தின் ஹீரோ ரக்சித் ஷெட்டிக்கும், இவருக்கும் காதல் மலர்ந்து நிச்சயதார்த்தம் வரை சென்றது.. ஆனால் அதன்பிறகு தெலுங்கில் ராஷ்மிகாவின் படங்கள் ஹிட்டாகி, முன்னணி நடிகையாக மாறியதும், நிச்சயதார்த்தத்தை ரத்துசெய்து, காதலரையும் பிரிந்துவிட்டார் ராஷ்மிகா.
மேலும் விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா இருவரும் இணைந்து அடுத்தடுத்த படங்களில் நடித்தது, விழாக்களில் ஒன்றாக கலந்துகொண்டது ஆகியவற்றின் மூலம் இவர்கள் இருவருக்குள்ளும் நட்பையும் தாண்டி காதல் மலர்ந்துள்ளதாக கடந்த இரண்டு வருடமாகவே சொல்லப்பட்டு வருகிறது. தற்போது அதை உறுதிப்படுத்தும் விதமாக ஒரு நிகழ்வு நடந்துள்ளது.
சில நாட்களுக்கு முன் விஜய் தேவரகொண்டா, தான் நடித்துவரும் லைகர் படத்தின் படப்பிடிப்பிற்காக பாரிஸ் சென்றார். அதேசமயம் தனது படங்களுக்கு சற்றே ஒய்வு கொடுத்த ரஷ்மிகா, அதே பாரிஸுக்கு டூர் கிளம்பி சென்றார். தற்போது லைகர் படப்பிடிப்பை முடித்து விஜய் தேவரகொண்டா ஊர் திரும்பியுள்ளார்.
இதை தொடர்ந்து ராஷ்மிகாவும் தனது ட்ரிப்பை முடித்து தற்போது ஐதராபாத் திரும்பியுள்ளார். இருவரும் பாரிஸில் சந்தித்துக்கொண்டதாக புகைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை என்றாலும், ராஷ்மிகாவின் இந்த தனிப்பட்ட பயணம் அவர்களது காதலை உறுதி செய்வது போலத்தான் இருக்கிறது என டோலிவுட்டில் பேசிக்கொள்கிறார்கள்..