
தெலுங்கு ரசிகர்கள் கொண்டாடும் பாலகிருஷ்ணாவின் அகான்டா
பாலகிருஷ்ணா நடித்த "அகான்டா" என்ற படம் கடந்த வாரம் வெளியானது. தெலுங்கு மாநிலங்களில் மட்டுமல்லாது அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் தெலுங்கு ரசிகர்கள் இந்தப் படத்தைக் கொண்டாடி வருவதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 55 கோடிக்கு வியாபாரமாகியுள்ள இந்தப் படம் கடந்த மூன்று நாட்களில் மட்டும் அந்த வசூலை எடுத்துவிட்டதாம். சில ஏரியாக்களில் படம் மூன்றாவது நாளிலேயே லாபக் கணக்கை ஆரம்பித்துவிட்டது என்றும் சொல்கிறார்கள். முதல் நாளிலேயே 20 கோடி ரூபாய் வசூலித்து இதுவரை வெளிவந்த பாலகிருஷ்ணா படங்களின் முதல் நாள் வசூல் சாதனையை முறியடித்துவிட்டதாம். தற்போது படத்தின் ஹிந்தி வெளியீட்டு உரிமை 20 கோடி ரூபாய் வரை விற்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.
கொரோனா இரண்டாவது அலைக்குப் பிறகு தெலுங்கில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்ற படமாக "அகான்டா" படம் அமைந்துள்ளது. தெலுங்கில் அடுத்தடுத்து சில முன்னணி நடிகர்களின் பெரிய படங்கள் வெளிவர உள்ளன. "அகான்டா"வின் வரவேற்பும் வெற்றியும் அந்தப் படங்களுக்கு பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளன.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!