
ஆபாச குறுஞ்செய்தி : அம்பலப்படுத்திய சின்னத்திரை சவுந்தர்யா
சவுந்தர்யா சமூக வலைத்தளங்களில் சுறுசுறுப்புடன் இயங்குபவர். இதனால் ஏராளமான ரசிகர்கள் அவரை சமூக வலைத்தளத்தில் பின் தொடருகின்றனர். இந்நிலையில் ஒரு கல்லூரி விரிவுரையாளர் ஒருவர் இவருக்கு ஆபாசமாகவும், கீழ்த்திரமான குறுஞ்செய்திகளை அனுப்பி உள்ளார். அதை அப்படியே ஸ்கிரீன் ஷாட்டாக தனது இன்ஸ்ட்ராகிராமில் வெளியிட்டுள்ள சவுந்தர்யா, சம்பந்தபட்ட கல்லூரி நிர்வாகத்திற்கும் அனுப்பி வைத்துள்ளார். அவரது கணக்கை முடக்குமாறு இன்ஸ்ட்ராகிராமிற்கும் புகார் மனு அனுப்பி உள்ளார். இந்த தகவல்களை சவுந்தர்யா தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அந்த நபரை பிளாக் செய்த ஸ்க்ரீன் ஷாட்டையும் பகிர்ந்து கொண்டுள்ளார். எதிர்காலத்தில் அந்த நபர் உருவாக்கக்கூடிய அனைத்து கணக்குகளையும் பிளாக் செய்து, "இந்த விருப்பத்தை கொண்டு வந்த இன்ஸ்டாகிராமுக்கு நன்றி" என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!