
காலில் விழுந்த தந்தை : உணர்ச்சிமயமான சரிகமப நிகழ்ச்சி மேடை
இந்நிலையில்,போட்டியாளர் ஸ்வேதா தனது அப்பாவிற்காக டெடிகேட் செய்து "ஆனந்த யாழை மீட்டுகிறாய்" என்ற பாடலை பாடினார். அப்போது அவர் தனது தந்தைக்காக எழுதியிருந்த கடிதத்தை மேடையில் படித்தார். அந்த கடிதத்தில் "எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். ஆனால், உங்களுக்கு என்னை பிடிக்குமா? பிடிக்காதா? என்று தெரியவில்லை. எனக்கு உங்களிடமிருந்து முத்தமும் அரவணைப்பும் வேண்டும்" என்று எழுதியிருந்தார்.
இதைபார்த்து உணர்ச்சிவசப்பட்ட ஸ்வேதாவின் தந்தை தன் மகள் தன் பாசத்திற்காக இவ்வளவு ஏங்கி தவிக்கிறாளா? என்று வருத்தப்பட்டு உடனடியாக மேடையிலேயே ஸ்வேதாவின் காலிலேயே விழுந்தார். இந்த நெகிழ்ச்சியான சம்பவம் பார்ப்பவர்கள் அனைவரையும் கண்கலங்க செய்தது. அதேசமயம் ஸ்வேதாவின் நீண்ட நாள் ஆசையான தந்தையின் முத்தமும் அவருக்கு கிடைத்துவிட்டது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!