
ராதிகா, குஷ்பூவை பார்த்தால் பொறாமையாக இருக்கும் - பூர்ணிமா பாக்யராஜ்
ஜூன் 08, 2024
Advertisement
தமிழ் திரையுலகில் 80கள் காலக்கட்டத்தில் முன்னணி நடிகையாக புகழ் பெற்றவர் நடிகை பூர்ணிமா பாக்யராஜ். இயக்குநர் பாக்யராஜை திருமணம் செய்து கொண்ட பின் சினிமாவை விட்டு விலகிய பூர்ணிமா சமீப காலங்களில் சினிமா, சீரியல் என நடித்து வருகிறார். பூர்ணிமா தற்போது மல்லி என்ற தொடரில் தனது தோழிகளான அம்பிகா மற்றும் நளினி உடன் சேர்ந்து நடிக்கிறார்.
இந்நிலையில், அவர் அண்மையில் அளித்துள்ள பேட்டியில், "நான் நடித்த போதும் சரி இப்போதும் சரி சமைப்பதே இல்லை. காரணம் பிசியான நடிகை என்பதற்காக இல்லை. எனக்கு சமைக்க தெரியாது. சமைத்தாலும் சுவையாக இருக்காது. ஆனால், எனது தோழிகளான ராதிகா, குஷ்பூ பிசியான நடிகைகளாக வலம் வந்தாலும் அவர்கள் சமைப்பது அருமையாக இருக்கும். விதவிதமாக சமைப்பார்கள். அதைபார்க்கும் போது எனக்கு பொறாமையாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், அவர் அண்மையில் அளித்துள்ள பேட்டியில், "நான் நடித்த போதும் சரி இப்போதும் சரி சமைப்பதே இல்லை. காரணம் பிசியான நடிகை என்பதற்காக இல்லை. எனக்கு சமைக்க தெரியாது. சமைத்தாலும் சுவையாக இருக்காது. ஆனால், எனது தோழிகளான ராதிகா, குஷ்பூ பிசியான நடிகைகளாக வலம் வந்தாலும் அவர்கள் சமைப்பது அருமையாக இருக்கும். விதவிதமாக சமைப்பார்கள். அதைபார்க்கும் போது எனக்கு பொறாமையாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!