
தொழிலதிபதிரான பிரியங்கா நல்காரி
அக் 28, 2023
Advertisement
ரோஜா தொடரில் நடித்து சின்னத்திரை நேயர்கள் மனதில் நிரந்தர இடத்தை பிடித்துள்ளார் பிரியங்கா நல்காரி. ரோஜா சீரியல் முடிவடைந்த பிறகு ஜீ தமிழில் சீதா ராமன் என்ற சீரியலில் நடிக்க ஆரம்பித்த போது, காதலர் ராகுல் வர்மாவை திடீரென திருமணம் செய்து கொண்டார். இதனால், சில வாரங்களிலேயே அந்த சீரியலை விட்டு விலகினர். இந்நிலையில், பிரியங்கா நல்காரி தற்போது அதே தொலைக்காட்சியில் நளதமயந்தி என்ற சீரியலில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்துள்ளார். அத்துடன் தனது கணவர் ராகுல் வர்மாவுடன் சேர்ந்து புதியதாக ரெஸ்டாரண்ட் ஒன்று தொடங்கி இருக்கிறார். அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பிரியங்காவுக்கு ரசிகர்கள் வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்.
Tags
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!