
இரட்டை சகோதரிகள் கதாநாயகியாக வெற்றி
அக் 03, 2023
Advertisement
விஜய் தொலைக்காட்சியில் ராதிகா சரத்குமார் மற்றும் இயக்குநர் கே.எஸ். ரவிகுமார் நடுவர்களாக இருந்து நடத்தி வந்த நிகழ்ச்சி "கதாநாயகி". கதாநாயகிகளைச் சின்னத்திரையில் அறிமுகப்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி ஜூலை மாதம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெறுபவர்களுக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் நாயகியாக நடிக்க வாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்த பல இளம் பெண்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அவர்களில் 8 முன்னணி போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில் இரட்டை சகோதரிகளான ரூபினா மற்றும் ரூபிசீனா ஆகியோர் தொடக்கத்திகத்தில் இருந்தே கவனம் பெற்றனர்.
இந்த நிகழ்ச்சியின் இறுதிசுற்று நடந்தது. இதில் எல்லோரும் எதிர்பார்த்தபடியே ரூபினா, ரூபிசீனா சகோதரிகள் கதாநாயகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு பரிசு தொகை பகிர்ந்தளிக்கப்பட்டது. இவர்களில் ஒருவர் "காற்றுக்கென்ன வேலி" சீரியலின் மூலம் பிரபலமான நடிகர் சுவாமிநாதன் கதாநாயகனாக நடிக்கும் சீரியலில் ஜோடியாக நடிக்க இருக்கிறார். மற்றொருவருக்கும் விரைவில் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்த பல இளம் பெண்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அவர்களில் 8 முன்னணி போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில் இரட்டை சகோதரிகளான ரூபினா மற்றும் ரூபிசீனா ஆகியோர் தொடக்கத்திகத்தில் இருந்தே கவனம் பெற்றனர்.
இந்த நிகழ்ச்சியின் இறுதிசுற்று நடந்தது. இதில் எல்லோரும் எதிர்பார்த்தபடியே ரூபினா, ரூபிசீனா சகோதரிகள் கதாநாயகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு பரிசு தொகை பகிர்ந்தளிக்கப்பட்டது. இவர்களில் ஒருவர் "காற்றுக்கென்ன வேலி" சீரியலின் மூலம் பிரபலமான நடிகர் சுவாமிநாதன் கதாநாயகனாக நடிக்கும் சீரியலில் ஜோடியாக நடிக்க இருக்கிறார். மற்றொருவருக்கும் விரைவில் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!