
சஞ்சீவை காதலிக்க இதுதான் காரணம் - மனம் திறக்கும் ஆல்யா
மாடலிங் செய்யும் போதே ஷூட்டிங் ஸ்பாட்டில் சஞ்சீவை பார்த்த ஆல்யா அவரை சைட் அடித்திருக்கிறார். அவரிடம் பேசும் போது கூட அண்ணா என அழைத்து தான் பேசியிருக்கிறார். இப்படியாக சென்று கொண்டிருக்கும் போது தான் ராஜா ராணி தொடரில் ஆல்யாவுக்கு ஜோடியாக சஞ்சீவ் கமிட்டாகியுள்ளார். அப்போதும் சஞ்சீவை பார்த்து அசடு வழிந்த ஆல்யா, சீரியலில் நடித்துக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் இருவருக்கும் ஏற்பட்ட புரிதல், விட்டுக்கொடுக்கும் தன்மையால் எங்களுக்குள் காதல் மலர்ந்தது. இப்போது திருமணமே நடந்திருந்தாலும் நாங்கள் காதலித்து கொண்டுதான் இருக்கிறோம் என்று ஆல்யா கூறியுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!