
கர்ணன் படத்தில் நடித்த குதிரைக்கார சிறுவன் காளி : இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?
கர்ணன் படத்தில் நடித்ததற்காக சிறுவன் காளிக்கு ஒன்றரை லட்ச ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டது. அதன்பிறகு ஊடக வெளிச்சத்தில் பெரிதாக தலைக்காட்டாத காளியை ஒருவர் பேட்டி எடுத்துள்ளார். அதில், கர்ணன் படத்தில் வாங்கிய சம்பள பணம் முழுவதையும் தனது சகோதரி மகளின் சடங்கிற்கு செலவழித்துவிட்டதாகவும், தற்போது வேலையில்லாமல் இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், படத்தில் நடிக்க மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்றும் கூறியுள்ளார்.
அந்த பேட்டியானது சோஷியல் மீடியாவில் பரவ, சிறுவன் காளிக்கு நல்லதொரு எதிர்காலம் அமைய வேண்டும் எனவும் பட வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் எனவும் பலரும் வாழ்த்தி வருகின்றனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!