
இறப்பதற்கு முன் முல்லை சித்ரா தோழியிடம் கூறியது என்ன? சக நடிகை பேட்டி
அந்த பேட்டியில், சித்ராவுக்கும் தனக்குமான நட்பை விளக்கி கூறிய சரண்யா, இறப்பதற்கு சில தினங்களுக்கு முன் சித்ரா மிகவும் சோகமாக இருந்ததாகவும் அதுகுறித்து தன்னிடம் கூறியதாகவும் கூறுகிறார். அவர் கூறியதிலிருந்து, பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடிக்கும் போதே சித்ராவுக்கும் ஹேம்நாத்துக்கும் பிரச்னை உருவாகியிருக்கிறது. குறிப்பாக சீரியலில் முல்லை கதாபாத்திரம் கதிர் கதாபாத்திரத்துடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் படமாக்கப்பட்ட போது பிரச்னை பெரிதாகியிருக்கிறது.
என்னால் சமாளிக்க முடியவில்லை. கணவர் (ஹேம்நாத்) கோபப்படுகிறார், என்னை அவர் புரிந்து கொள்ளவில்லை என்று சரண்யாவிடம் கூறி வருத்தப்பட்டிருக்கிறார். மேலும், சித்ரா இதுபோன்று இன்னும் பல விஷயங்களை மறைத்து வெளியில் சிரித்தபடியே இருந்தார் எனக்கூறி சரண்யா துராடி அந்த பேட்டியில் பதிவு செய்துள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!