
ரச்சிதா பிரிந்து வாழ்வது உண்மை : தினேஷ் சொல்கிறார்
இதுகுறித்து தினேஷ் கூறியிருப்பதாவது: எல்லோர் வீட்டிலும் கணவன், மனைவிக்குள்ளாக சண்டை இருப்பது போன்றுதான் எங்களுக்குள்ளும் சின்ன சண்டை இருக்கிறது. சிலர் சீக்கிரம் புரிந்து கொண்டு ஒன்று சேர்ந்து விடுவார்கள். சிலருக்கு அது நேரம் எடுக்கும். எங்களுக்குள்ளும் அது போலத்தான். சிறிது காலம் பிரிந்து இருக்கிறோம். ஆனால், இப்போது வரை நானோ, ரச்சிதாவோ சட்டரீதியாக பிரியலாம் என்று நினைத்து எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என்பது மட்டும் உறுதி.
விரைவில் காலம் எல்லாவற்றையும் சரி செய்யும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன். ரச்சிதா என்னை விட தைரியசாலி. தவறாக பரவும் வதந்திகளை கண்டு கொள்ள மாட்டார். நானும் அதை புறந்தள்ளி விடுவேன். இப்போதைக்கு இருவரும் அவரவர் வேலையில் கவனமாக இருக்கிறோம். விரைவில் நல்லது நடக்கும் என நம்புகிறேன். என தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் இருவரும் பிரிந்து வாழ்வது உறுதியாகி இருக்கிறது. ரச்சிதா தரப்பில் விவாகரத்துக்கான சட்டரீதியான ஏற்பாடுகள் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!