
அப்பவே பாடிஷேமிங்! கிடைச்ச வாய்ப்பை தூக்கி எறிந்தேன்: நாதஸ்வரம் பென்சி பிரிங்க்ளின்
இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ள பென்சி ப்ரிங்கிளின், "உங்களில் யார் அடுத்த பிரபுதேவா போட்டிக்கான ஆடிஷனில் நானும் கலந்து கொண்டேன். எனக்கு கிளாசிக்கல் நடனம் மட்டும் தான் தெரியும். வெஸ்டர்ன் கத்துக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. என்னை பார்த்துவிட்டு ஒரு கோரியோகிராபர் நீ ரொம்ப குண்டா இருக்கேம்மா; நீ ஏன் போட்டியில கலந்துக்கனும் நினைக்கிறன்னு கேட்டார். அப்பவே பாடிஷேமிங் எதிர்கொள்ள ஆரம்பிச்சேன். அந்த போட்டியில் தேர்வாகியும், என்னால முடியாதுங்கிற பயத்தால நான் கலந்துக்கல. அந்த வாய்ப்பை மிஸ் பண்ணிட்டு பல நாட்கள் அதை முயற்சி செய்து பாத்திருக்கலாம்னு அழுதிருக்கேன்" என்று கூறியுள்ளார்.
கடந்த 12 வருடங்களில் பென்சி ப்ரிங்கிளின் நடித்த சீரியல் இரண்டு மட்டும் தான் என்றாலும், அவர் தேர்ந்தெடுத்திருந்த கதாபாத்திரம் மற்றும் அவரது எதார்த்தமான நடிப்பால் நல்லதொரு அங்கீகாரத்தை பெற்றுள்ளார். இப்போது திருமுருகன் டீமில் பயணித்துக் கொண்டிருக்கும் பென்சி மிக விரைவில் புதிய ப்ராஜெக்டில் சந்திப்பேன் என நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!