
அமீருடன் கல்யாணமா? - முதல் முறையாக வாய் திறந்த பாவனி
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பிறகும் அமீர் - பாவனி நெருக்கமான நண்பர்களாக தான் வலம் வந்தனர். இருவரும் சேர்ந்து ஒரு பாடலுக்கு அழகான கவர் டான்ஸ் ஒன்றையும் ஆடி வெளியிட்டிருந்தனர். ரசிகர்கள் மத்தியில் அந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சமீபத்தில் கல்லூரி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாவனியிடம், அங்கிருந்த மாணவிகள் அமீர் பற்றியும் அமீருடன் கல்யாணமா? எனவும் கேள்விகள் எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த பாவனி, "அமீர் நல்லா இருக்கார். நீங்க அவரையும் அழைச்சிருக்கனும். கல்யாணத்த பத்தி சொல்லனும்னா! எங்க வீட்லையும் ஆர்வமா தான் இருக்காங்க. அமீர், அமீர்னு தான் சொல்றாங்க. தெரியல. அப்படி ஒன்னு நடந்தா கட்டாயம் உங்க கிட்ட முதலில் சொல்றேன்" என பதிலளித்துள்ளார். காதல் டூ கல்யாணம் மாதிரி இது நட்பு டூ கல்யாணமா இருக்கலாம்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!