
இனி சீரியல்களே வேண்டாம் - பிரஜின் சொல்ல காரணம் என்ன?
ஆக 04, 2022
Advertisement
சின்னத்திரையில் வீஜேவாக என்ட்ரியான பிரஜினுக்கு உண்மையில் படங்களில் நடிப்பதில் தான் அதிக ஆர்வம் இருந்தது. சினிமாவில் சரிவர வாய்ப்புகள் கிடைக்காததால் வீஜே மற்றும் சீரியல் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டார். இடையில் சில படங்களில் நடித்திருந்தாலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு அவை வெற்றிப்படமாக அமையவில்லை. எனவே, சீரியலில் மீண்டும் கம்பேக் கொடுத்த பிரஜின் விஜய் டிவியின் "சின்னத்தம்பி" சீரியலின் மூலம் மீண்டும் புகழ் வெளிச்சத்தை அடைந்தர். தொடர்ந்து அன்புடன் குஷி, வைதேகி காத்திருந்தால் ஆகிய தொடர்களில் கமிட்டான பிரஜினுக்கு ஏமாற்றமே காத்திருந்தது. அந்த சீரியல்கள் அனைத்தும் விரைவிலேயே சில காரணங்களால் முடித்து வைக்கப்பட்டன. இதற்கிடையில் பிரஜினுக்கு சினிமா வாய்ப்புகள் மீண்டும் கதவை தட்ட, தற்போது அவர் கைவசம் 7 படங்கள் உள்ளன. இதன் காரணமாக தான் "இனி சீரியலில் நடிக்க மாட்டேன் சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்த போகிறேன்" என சோஷியல் மீடியாவில் லைவ் வந்த பிரஜின் ரசிகர்களிடம் கூறியுள்ளார். பிரஜினின் "டி3" படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் அவரின் அடுத்தடுத்த ப்ராஜெக்ட் அப்டேட்டுகளை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!