
புது சீரியலில் கமிட் ஆன விஷ்ணு?
இந்நிலையில், இதில் ஹீரோவாக யார் நடிப்பார் என பலரும் எதிர்பார்த்த வந்தனர். தற்போது இதில் பிரபல சின்னத்திரை நடிகர் விஷ்ணு விஜய் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஷ்ணு விஜய் முன்னதாக "கனா காணும் காலங்கள்", "ஆபிஸ்" ஆகிய தொடர்களின் மூலம் பிரபலமானவர். இருந்தாலும் அமுல் பேபி என்ற பட்டப்பெயருடன் அவர் அதிகமாக பிரபலமானது ஜீ தமிழின் சத்யா சீரியலில் தான். தற்போது சத்யா 2 ஒளிபரப்பாகி வருகிறது. இதிலும் விஷ்ணு தான் ஹீரோ. ஆனால் அந்த முதல் சீசனை போல் இரண்டாவது சீசன் நல்ல வரவேற்பை பெறவில்லை. இதற்கிடையில் ரச்சிதாவுக்கு ஜோடியாக நடிக்கவிருக்கும் விஷ்ணு சத்யா 2 சீரியலை கைவிடுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
சொல்ல மறந்த கதை வருகிற மார்ச் 7 முதல் இரவு 9 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!