
காதலியை கரம்பிடித்த குரு
டிச 04, 2024
Advertisement
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சந்தியராகம் தொடரில் கதிர் என்கிற கதாபாத்திரத்தின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியுள்ளார் குரு. அறிமுக தொடரிலேயே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரசிகர் கூட்டத்தை ஈர்த்துள்ளார். இந்நிலையில், கடந்தவாரம் குருவுக்கும் ரேச்சல் என்பவருக்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது. குருவும் ரேச்சலும் ஒருவரையொருவர் காதலித்து வந்த நிலையில் இருவீட்டார் சம்மதத்துடன் தற்போது திருமணம் நடந்து முடிந்துள்ளது. இவர்களது திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சியில் பல்வேறு சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளனர். அதன் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாக ரசிகர்களும் குரு ரேச்சல் ஜோடிக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!