
குண்டாக இருந்ததால் உருவகேலி செய்தார்கள் : மனம் திறந்த வீஜே தனுஷிக்
ஜூன் 27, 2024
Advertisement
இலங்கையை சேர்ந்த வீஜே தனுஷிக் தமிழ் சீரியல்களில் நடித்து தமிழ்நாட்டு நேயர்களிடம் பிரபலமாகி வருகிறார். முன்னதாக அன்பே வா, கார்த்திகை தீபம் ஆகிய சீரியல்களில் நடித்துள்ள தனுஷிக் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நீ நன் காதல் சீரியலில் முக்கியமான ரோலில் நடித்து வருகிறார். எதார்த்தமான தனது நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ள தனுஷிக், மீடியாவுக்கு வந்த ஆரம்பகால கட்டத்தில் உருவகேலியை சந்தித்தாக அண்மையில் அளித்துள்ள பேட்டியில் கூறியிருக்கிறார்.
அதில் அவர், "நான் ஸ்ரீலங்காவில் மீடியாவில் வேலை பார்த்து வந்தேன். லட்சியத்தோடு சென்னைக்கு வந்து பல கஷ்டங்களை அனுபவித்தேன். அப்போது ஒரு முறை ஒரு தொலைக்காட்சியில் ஆங்கரிங் ஆடிஷனில் கலந்து கொண்டேன். அப்போது நான் கொஞ்சம் குண்டாக இருப்பேன். இதனால் என்னை சர்ஜரி செய்து கொண்டு வர சொன்னார்கள். வாய்ப்பில்லை என்று சொன்னால் கூட பரவாயில்லை. நான் குண்டாக இருக்கிறேன் என்று சொன்னது தான் வேதனையாக இருந்தது. என்னை உருவகேலி செய்ததாக நினைத்து ஆட்டோவில் உட்கார்ந்து கதறி அழுதேன். மீடியா பீல்டை தேர்வு செய்தது தவறான முடிவோ? என வருந்தினேன்" என கூறியுள்ளார்.
அதில் அவர், "நான் ஸ்ரீலங்காவில் மீடியாவில் வேலை பார்த்து வந்தேன். லட்சியத்தோடு சென்னைக்கு வந்து பல கஷ்டங்களை அனுபவித்தேன். அப்போது ஒரு முறை ஒரு தொலைக்காட்சியில் ஆங்கரிங் ஆடிஷனில் கலந்து கொண்டேன். அப்போது நான் கொஞ்சம் குண்டாக இருப்பேன். இதனால் என்னை சர்ஜரி செய்து கொண்டு வர சொன்னார்கள். வாய்ப்பில்லை என்று சொன்னால் கூட பரவாயில்லை. நான் குண்டாக இருக்கிறேன் என்று சொன்னது தான் வேதனையாக இருந்தது. என்னை உருவகேலி செய்ததாக நினைத்து ஆட்டோவில் உட்கார்ந்து கதறி அழுதேன். மீடியா பீல்டை தேர்வு செய்தது தவறான முடிவோ? என வருந்தினேன்" என கூறியுள்ளார்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!