
ராதிகாவின் புதிய தொடர்: பொன்னி c/o ராணி
மே 23, 2022
ராதிகா சரத்குமாரின் புகழ்பெற்ற தொடரான சித்தியின் 2ம் சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பத்தில் இதில் ராதிகா நடித்தார். அதன்பிறகு விலகிக் கொண்டார். 500 எபிசோட்களை தாண்டிய இந்தத் தொடர் விரைவில் முடிவடைய உள்ளது. இதை தொடர்ந்து கலைஞர் டிவியில் ராதிகா தயாரிப்பு, நடிப்பில் புதிய தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது. பொன்னி c/o ராணி என்று அதற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடரில் ராணி கேரக்டரில் ராதிகாக நடிக்கிறார், பொன்னி கேரக்டரில் ப்ரீத்தி சஞ்சீவ் நடிக்கிறார். அழகான கூட்டுக் குடும்பத்தில் ஏற்படும் பிரச்னையை ராணியும், பொன்னியும் சேர்ந்து எப்படி தீர்க்கிறார்கள் என்பதுதான் இதன் கதை.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!