
மீண்டும் அம்மா ஆகிறார் நீலிமா ராணி
செப் 10, 2021
Advertisement
பிரபல சின்னத்திரை நடிகை மற்றும் தயாரிப்பாளர் நீலிமா ராணி. வாணி ராணி, கோலங்கள், தாமரை, செல்லமே, அத்திப்பூக்கள், தென்றல் போன்ற தொடர்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர். பண்ணையாரும் பத்மினியும், குற்றம் 23, நான் மகான் அல்லா, மொழி போன்ற படங்களில் நடித்துள்ளார். கடைசியாக விஷால் நடித்த சக்ரா படத்தில் நடித்தார். கணவருடன் இணைந்து சில சீரியல்களை தயாரிக்கவும் செய்தார்.
தன்னை விட 12 வயது மூத்த இசைவாணனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமான 9 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு மகள் பிறந்தார். தற்போது இரண்டாவது முறையாக அம்மா ஆகிறார். தன் கணவர் குழந்தையுடன் இருக்கும் படத்தை இன்ஸ்ட்ராகிராமில் வெளியிட்டு அவர் எழுதியிருப்பதாவது:
இனிய ஆண்டு விழா பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியாக இருக்கிறோம், ஜனவரி மாதத்தில் நாங்கள் நான்காகப் போகிறோம். 20 வாரங்கள் , இன்னும் 20 பயணங்கள் உள்ளன மகிழ்ச்சி. என்று கூறியிருக்கிறார்.
தன்னை விட 12 வயது மூத்த இசைவாணனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமான 9 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு மகள் பிறந்தார். தற்போது இரண்டாவது முறையாக அம்மா ஆகிறார். தன் கணவர் குழந்தையுடன் இருக்கும் படத்தை இன்ஸ்ட்ராகிராமில் வெளியிட்டு அவர் எழுதியிருப்பதாவது:
இனிய ஆண்டு விழா பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியாக இருக்கிறோம், ஜனவரி மாதத்தில் நாங்கள் நான்காகப் போகிறோம். 20 வாரங்கள் , இன்னும் 20 பயணங்கள் உள்ளன மகிழ்ச்சி. என்று கூறியிருக்கிறார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!