
இனி இவர் தான் ஹீரோ - காற்றுக்கென்ன வேலி சீரியல் குழு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
அக் 23, 2021
Advertisement
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் காற்றுக்கென்ன வேலி தொடரில் ஹீரோ சூர்யா கதாபாத்திரத்தில் புது நடிகர் நடிக்க இருப்பதை தொலைக்காட்சி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6 மணிக்கு ஓளிபரப்பாகி வரும் காற்றுக்கென்ன வேலி சீரியல் 200 எபிசோடுகளை கடந்து ஓடி வருகிறது. இதில் ஹீரோவாக தர்ஷன் கே ராஜூ நடித்து வந்தார். இந்நிலையில் அவர் திடீரென சீரியலை விட்டு வெளியேறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இனி அவருக்கு பதிலாக மிதுன ராசி சீரியலில் நடித்த சுவாமிநாதன் அனந்தராமன் என்ற நடிகர் ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அரண்மனை கிளி தொடரின் மூலம் பிரபலமான தர்ஷன் இந்த தொடரிலும் நன்றாக நடித்து ரசிகர்களின் மதிப்பை பெற்று வந்தார். இந்நிலையில் எந்தவொரு காரணமும் தெளிவாக தெரியாத நிலையில் அவர் சீரியலை விட்டு விலகியிருப்பது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6 மணிக்கு ஓளிபரப்பாகி வரும் காற்றுக்கென்ன வேலி சீரியல் 200 எபிசோடுகளை கடந்து ஓடி வருகிறது. இதில் ஹீரோவாக தர்ஷன் கே ராஜூ நடித்து வந்தார். இந்நிலையில் அவர் திடீரென சீரியலை விட்டு வெளியேறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இனி அவருக்கு பதிலாக மிதுன ராசி சீரியலில் நடித்த சுவாமிநாதன் அனந்தராமன் என்ற நடிகர் ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அரண்மனை கிளி தொடரின் மூலம் பிரபலமான தர்ஷன் இந்த தொடரிலும் நன்றாக நடித்து ரசிகர்களின் மதிப்பை பெற்று வந்தார். இந்நிலையில் எந்தவொரு காரணமும் தெளிவாக தெரியாத நிலையில் அவர் சீரியலை விட்டு விலகியிருப்பது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!