
சூப்பர் சிங்கர் வின்னர்களுக்கு கிடைப்பது இதுதானா?
ஜன 07, 2025
Advertisement
விஜய் டிவியில் நடத்தப்படும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வெற்றி பெறுவோருக்கு 50 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசாக கொடுக்கப்படுவதாக அறிவிப்புகள் வெளியாகிறது. ஆனால், இதுவரை அந்த பரிசை முழுமையாக அனுபவித்தவர் யாரும் இல்லை என்பது தான் நிதர்சனமாக இருக்கிறது. சில தினங்களுக்கு முன் சூப்பர் சிங்கர் சீசன் 9 ல் வெற்றி பெற்ற அருணா, ஒரு பேட்டியில் பேசிய போது 50 லட்சம் மதிப்புள்ள வீடு கிடைக்க வேண்டுமானால் அதற்கு 15 லட்சம் வரி கட்ட வேண்டும். எனவே, சிறிது சிறிதாக நாங்கள் அந்த பணத்தை கட்டி வருகிறோம் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், அருணா சொல்லியதை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் சீசன் 8 வெற்றியாளர்களான செந்தில் கணேஷ் - ராஜலெட்சுமி தம்பதியினரும் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டை பெற வேண்டுமானால் வரி கட்ட வேண்டும். எனவே, நாங்கள் அந்த 15 லட்சத்தை கழித்து விட்டு 35 லட்ச ரூபாய் மதிப்புள்ள வீட்டையே பரிசாக பெற்றுக் கொண்டோம் என கூறியுள்ளனர்.
இந்நிலையில், அருணா சொல்லியதை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் சீசன் 8 வெற்றியாளர்களான செந்தில் கணேஷ் - ராஜலெட்சுமி தம்பதியினரும் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டை பெற வேண்டுமானால் வரி கட்ட வேண்டும். எனவே, நாங்கள் அந்த 15 லட்சத்தை கழித்து விட்டு 35 லட்ச ரூபாய் மதிப்புள்ள வீட்டையே பரிசாக பெற்றுக் கொண்டோம் என கூறியுள்ளனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!