
சீரியலை விட்டு விலகுகிறாரா ரித்திகா?
டிச 14, 2022
Advertisement
விஜய் டிவி பிரபலமான ரித்திகா, அந்த தொலைக்காட்சியின் சூப்பர் ஹிட் சீரியலான "பாக்கியலெட்சுமி" தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த தொடரில் ரித்திகாவின் நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பாரட்டுகள் கிடைத்து வருகிறது. ரித்திகாவிற்கு கடந்த நவம்பர் மாதம் திருமணம் நடந்து முடிந்த நிலையில், தற்போது ரித்திகாவும் அவரது கணவரும் ஜாலியாக மாலத்தீவுக்கு சென்று ஹனிமூனை எஞ்சாய் செய்து வருகின்றனர். இதுதொடர்பிலான போட்டோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்நிலையில் பாக்கியலெட்சுமி சீரியலை விட்டு ரித்திகா விலகப்போவதாக சின்னத்திரை வட்டாரங்களில் செய்திகள் பரவி வருகிறது. இதுகுறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் சீரியல் குழுவினரோ, ரித்திகாவோ வெளியிடவில்லை. இருப்பினும் சமீபகாலங்களில் ரித்திகாவின் போர்ஷன் சீரியலில் குறைக்கபட்டுள்ளது. எனவே, அவர் சீரியலில் தொடர்வாரா? என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்துள்ளது.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!