
மாரிமுத்துவுக்காக டப்பிங் பேச பயந்தேன்
இந்நிலையில், மாரிமுத்துவுக்காக டப்பிங் பேசிய வெங்கட் ஜனா மாரிமுத்துவுக்காக டப்பிங் பேச ரொம்பவே பயந்ததாக கூறியுள்ளார். அவர் அண்மையில் அளித்த ஒரு பேட்டியில், "மாரிமுத்து சார் அவர் இயக்கிய கண்ணும் கண்ணும் படத்தில் தான் முதன் முதலில் என்னை டப்பிங் பேச வைத்தார். இப்போது அவருக்காக டப்பிங் பேச வேண்டிய நிலைமை வந்துவிட்டது. மாரிமுத்து போலவே ரொம்ப கஷ்டமாக தான் இருந்தது. ரொம்பவே பயந்தேன். காரணம் குணசேகரன் கேரக்டர் ரொம்பவே ஸ்ட்ராங்கான கேரக்டர். அதில் நான் பேசி எதுவும் சொதப்பி விடக்கூடாது என பயந்தேன். அதன்பிறகு இயக்குநர் திருச்செல்வம் கொடுத்த தைரியத்தால் தான் பேசினேன். மாரிமுத்து விட்டு போனதை நான் முடித்து வைத்ததை போன்று ஒரு சின்ன நிம்மதி இருக்கிறது. இதுவே நான் அவருக்கு செலுத்தும் அஞ்சலியாக நினைக்கிறேன்" என்று நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!