
ஆடிஷனில் அலைக்கழிக்கப்பு, சோகமான இரவுகள் : எதிர்நீச்சல் கரிகாலனின் டைரி பக்கங்கள்
ஒருமுறை விமல் குமார் ஆடிஷனுக்காக சென்ற இடத்தில் அவரிடம் ஒரு போட்டோவை காண்பித்து அதிலிருப்பது போல் முடி வெட்டி வர சொல்லியுள்ளனர். விமலும் முடிவெட்டி சென்றிருக்கிறார். மறுநாளும் மீண்டும் முடி வெட்டி வர சொல்லி அனுப்பி வைத்துள்ளனர். இதுபோல் மூன்று நாள் அவரை அலைக்கழித்துள்ளனர். நான்காவது நாள் விமல் அங்கு சென்று பார்த்தபோது அந்த குழுவானது இடத்தை காலி செய்து சென்றுவிட்டனர். இதனால் மனமுடைந்த விமல்குமார் ரூமுக்கு சென்று தண்ணீர் குடித்துவிட்டு படுத்துக்கொண்டாராம்.
அதுபோல் மீடியாவில் பயணிப்பதால் சில இயக்குநர்களும் விமல்குமாருடன் நட்பாக பழகி வருகின்றனர். ஆனாலும், வாய்ப்பு என்று கேட்கும் போது கேரக்டர் டிமாண்ட் பண்ண வேண்டும், வாய்ப்பில்லை என்று வெளிப்படையாகவே மறுத்துவிடுவார்களாம். இதுபோல் பல கவலையான இரவுகள் என் வாழ்க்கையில் இருக்கிறது. அதெல்லாம் என் டைரி பக்கங்களில் எழுதி வைத்துள்ளேன் என்று கூறியுள்ளார்.
தற்போது எதிர்நீச்சல் தொடரில் கரிகாலன் ரோலில் விமல்குமார் நடித்து, சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!