
செல்பிக்காக செய்வினையா? - போலீஸ் புகாரளித்த சதீஷ்
ஜூலை 27, 2024
பாக்கியலெட்சுமி தொடரில் கோபி கதாபாத்திரத்தில் நடிக்கும் சதீஷுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதிலும், இரு மனைவிகளிடம் மாட்டிக்கொண்டு படாதபாடு படும் அவரது கேரக்டரை பார்த்து பல ரசிகைகளும் அவருக்கு பெருகி வருகின்றனர். இந்நிலையில், சதீஷின் ரசிகை ஒருவர் அவரிடம் நீண்ட நாட்களாக செல்பி புகைப்படம் கேட்டு டார்ச்சர் செய்துள்ளார். புகைப்படம் எடுக்க முடியாமல் போகவே அடையாரில் உள்ள சதீஷ் வீட்டு முன்பு குங்குமம் தடவிய எலுமிச்சம்பழத்தை வைத்துக்கொண்டு செய்வினை வைத்துவிடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் கலக்கம் அடைந்த சதீஷ் தற்போது திருவான்மியூர் காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்து புகார் அளித்துள்ளார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!