
சீரியல் நடிகர் நவீன் மீது புகார் : சக நடிகையையும் தாக்கினாரா?
ஆக 25, 2022
Advertisement
கலர்ஸ் தமிழ் சேனலின் "இதயத்தை திருடாதே" சீரியலின் மூலம் சின்னத்திரையில் நுழைந்த நவீன் தற்போது அதே சேனலில் "இது கண்ட நாள் முதல்" என்ற தொடரில் நடித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் ஷூட்டிங் ஸ்டார்ட் ஆகியும் ஸ்பாட்டுக்கு வராமல் இருந்த நவீனை உதவி இயக்குநர் குலசேகரன் என்பவர் அவரது அறைக்கு சென்று அழைத்துள்ளார். அப்போது கோவமடைந்த நவீன் குலசேகரனின் கண்ணத்தில் ஓங்கி அறைந்ததாக கூறப்படுகிறது.
இதில் குலசேகரனுக்கு அடிப்பட்டு முகத்தில் ரத்தகாயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நவீன் மீது சின்னத்திரை இயக்குநர் சங்கத்திலும், மதுரவாயல் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார் உதவி இயக்குநர் குலசேகரன். பின்னர் சங்கத்தின் மூலமே பிரச்னையை தீர்த்து கொள்வதாக முடிவு செய்யப்பட்டு தற்போது சமரசம் ஏற்பட்டு மீண்டும் படப்பிடிப்பு துவங்கி உள்ளதாக தெரிகிறது. இதற்கிடையில் "இதயத்தை திருடாதே" சீரியலில் நவீனுடன் சேர்ந்து நடித்திருந்த பிரபல நடிகை நிலானியும் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் ஆரம்பத்தில் நவீன் பாசமாக பழகியதாகவும் சீரியல் முடியும் தருவாயில் அவரது கேரக்டர் மாறிவிட்டதாகவும் கூறியுள்ளார். மேலும், ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரு முறை சண்டை காட்சியின் போது குத்துவிளக்கை மிகவும் ஆக்ரோஷமாக நடிக்கிறேன் என்ற பெயரில் சூடான எண்ணெய்யை என் மீதும், நடிகர் ஷாம் மீதும் ஊற்றிவிட்டார். அதற்காக மன்னிப்பு கூட கேட்கவில்லை. மற்றொரு நிகழ்வில் நவீன் என்னை பிடித்து தள்ளுவது போல் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது நவீன் என்னை உண்மையிலேயே தள்ளியதில் எனது முதுகு எலும்பு முறிந்துவிட்டது என்றும் புகார் கூறியுள்ளார். வைரலாக பரவி வரும் இந்த செய்திகளால் நவீனுக்கு ஆதரவாகவும் எதிராகவும் நெட்டிசன்களுக்கிடையே சண்டை நடந்து வருகிறது.
இதில் குலசேகரனுக்கு அடிப்பட்டு முகத்தில் ரத்தகாயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நவீன் மீது சின்னத்திரை இயக்குநர் சங்கத்திலும், மதுரவாயல் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார் உதவி இயக்குநர் குலசேகரன். பின்னர் சங்கத்தின் மூலமே பிரச்னையை தீர்த்து கொள்வதாக முடிவு செய்யப்பட்டு தற்போது சமரசம் ஏற்பட்டு மீண்டும் படப்பிடிப்பு துவங்கி உள்ளதாக தெரிகிறது. இதற்கிடையில் "இதயத்தை திருடாதே" சீரியலில் நவீனுடன் சேர்ந்து நடித்திருந்த பிரபல நடிகை நிலானியும் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் ஆரம்பத்தில் நவீன் பாசமாக பழகியதாகவும் சீரியல் முடியும் தருவாயில் அவரது கேரக்டர் மாறிவிட்டதாகவும் கூறியுள்ளார். மேலும், ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரு முறை சண்டை காட்சியின் போது குத்துவிளக்கை மிகவும் ஆக்ரோஷமாக நடிக்கிறேன் என்ற பெயரில் சூடான எண்ணெய்யை என் மீதும், நடிகர் ஷாம் மீதும் ஊற்றிவிட்டார். அதற்காக மன்னிப்பு கூட கேட்கவில்லை. மற்றொரு நிகழ்வில் நவீன் என்னை பிடித்து தள்ளுவது போல் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது நவீன் என்னை உண்மையிலேயே தள்ளியதில் எனது முதுகு எலும்பு முறிந்துவிட்டது என்றும் புகார் கூறியுள்ளார். வைரலாக பரவி வரும் இந்த செய்திகளால் நவீனுக்கு ஆதரவாகவும் எதிராகவும் நெட்டிசன்களுக்கிடையே சண்டை நடந்து வருகிறது.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!