
புது சீரியலில் ரீ-என்ட்ரி கொடுக்கும் ஆஷிகா படுகோன்
டிச 13, 2021
Advertisement
தமிழ்ச்செல்வி தொடர் மூலம் தமிழ் சின்னத்திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ஆஷிகா படுகோன். தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழி சீரியல்களிலும் நடித்து கலக்கி வந்த ஆஷிகாவுக்கு சமீபத்தில் சேட்டன் ஷெட்டி என்பவருடன் திருமணம் முடிந்தது. திருமணத்திற்கு பிறகு ஆஷிகா நடிக்க மாட்டார் என்றே ரசிகர்கள் பலரும் கருதினர்.
இந்நிலையில் அவர் புதிய சீரியலான சிங்கப்பெண்ணே என்ற தொடரில் மீண்டும் கதாநாயாகியாக நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. எனினும், ஆஷிகாவை மீண்டும் திரையில் காணப்போகும் மகிழ்ச்சியில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். முன்னதாக சிங்கப்பெண்ணே தொடரில் பிரபல தொகுப்பாளினி டிடியின் சகோதரி பிரியதர்ஷினி நடிப்பதாக இருந்தது. தற்போது அந்த தொடரில் அவருக்கு பதிலாக ஆஷிகா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
இந்நிலையில் அவர் புதிய சீரியலான சிங்கப்பெண்ணே என்ற தொடரில் மீண்டும் கதாநாயாகியாக நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. எனினும், ஆஷிகாவை மீண்டும் திரையில் காணப்போகும் மகிழ்ச்சியில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். முன்னதாக சிங்கப்பெண்ணே தொடரில் பிரபல தொகுப்பாளினி டிடியின் சகோதரி பிரியதர்ஷினி நடிப்பதாக இருந்தது. தற்போது அந்த தொடரில் அவருக்கு பதிலாக ஆஷிகா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!