நடிகை அருள்ஜோதி ஆரோக்கியராஜ், தமிழ் சினிமாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளிவந்த "நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல" என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் . அதன்பிறகு சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால் சின்னத்திரைக்கு வந்த அருள்ஜோதி, ஜீ தமிழின் "நினைத்தாலே இனிக்கும்", விஜய் டிவியின் "பாரதி கண்ணம்மா" ஆகிய தொடர்களில் ஏற்கனவே நடித்து வந்த நடிகைகள் விலகிவிட, ரீப்ளேஸ்மெண்டாக நுழைந்தார். ஆனாலும், மிககுறுகிய காலத்தில் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம்பிடித்ததுடன் இன்ஸ்டாகிராமிலும் டீசென்ட்டான புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களின் காதல் நாயகியாக வலம் வருகிறார். இந்நிலையில், பாவாடை தாவணியில் அவர் அண்மையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் பலரையும் கிறங்கடித்து வைரலாகி வருகிறது. அருள்ஜோதியின் அழகில் மயங்கிய ரசிகர்கள் பலரும் கமெண்ட் பாக்சில் ஹார்டின் மழை பொழிந்து லவ் ப்ரொபோஸ் செய்து வருகின்றனர்.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!